ஒழுங்கா ரூமுக்குள்ள போ.. மிரட்டிய இயக்குனர்.. ரூமுக்குள் சென்ற நயன்தாரா..! ரகசியம் உடைத்த நடிகர்..!

ஒழுங்கா ரூமுக்குள்ள போ.. மிரட்டிய இயக்குனர்.. ரூமுக்குள் சென்ற நயன்தாரா..! ரகசியம் உடைத்த நடிகர்..!

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் இன்று தவிர்க்க முடியாத நடிகையாக மாறியிருக்கும் நயன்தாரா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

நயன்தாரா..

நடிகை நயன்தாரா ஆரம்ப காலத்தில் மலையாள திரையுலகில் அறிமுகம் ஆன பிறகு தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் தமிழில் இவர் ஐயா திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் நயன்தாராவை தேடி வந்தது. அந்த படங்களில் நடித்து தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இவரது 75 ஆவது திரைப்படமாக வெளி வந்த அன்னபூரணி திரைப்படம் ரசிகர்களின் மனதை தொட வில்லை. மேலும் இந்த படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் ஓ டி டி தளத்தில் இருந்தும் இந்த படம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

தற்போது இவர் டெஸ்ட் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். விரைவில் திரையரங்குகளில் எந்த படத்தை நீங்கள் காணலாம். அது போல மண்ணாங்கட்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

உடையை மாற்றி..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான் நயன்தாராவோடு நடிக்கும் போது ஐயா படத்தில் ஏற்பட்ட அனுபவத்தை ஷேர் செய்து இருக்கிறார். இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இயக்குனர் ஹரி இயக்கியிருந்ததை ஏற்கனவே கூறியிருந்தேன்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஹரி நடிகர் மற்றும் நடிகைகளை கடுமையாக திட்டுவாராம். அந்த வகையில் ஐயா திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே நடிகை நயன்தாரா கடுமையான திட்டுகளை ஹரியிடமிருந்து பெற்று இருக்கிறார் என்ற அதிர்ச்சியான தகவலை தான் தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

ஹரியின் கோபத்துக்கு காரணம் என்னவென்றால் நடிகை நயன்தாரா இந்த படத்தில் கிராமத்து பெண் ரோல் ஏற்று நடிக்க இருந்தார். எனினும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் மாடர்ன் உடைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போட்டு வந்ததை அடுத்து இயக்குனர் ஹரி கடுமையாக திட்டியதோடு மட்டும் இல்லாமல் ஒழுங்கா ரூமுக்கு போ உன்னை எப்படி எல்லாம் கற்பனை செய்து வைத்தேன் தெரியுமா? இப்படி மாடர்ன் பொண்ணு மாதிரி வந்து நிக்கிறியே உடையை மாற்றி விட்டு வா என்று கூறினாராம்.

இதனை அடுத்து நயன்தாரா ரூமுக்கு சென்று உடையை மாற்றி விட்டு வந்த பிறகுதான் அவர் அமைதியானார் எனக் கூறியதை அடுத்து இந்த விஷயம் தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவுவதோடு ரசிகர்கள் அதிகளவு பார்க்கும் செய்தியாகவும் உள்ளது.

மேலும் இவ்வளவு கஷ்டப்பட்டு தான் நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இன்னும் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கும் இவர் மேலும் பல படங்களில் நடித்து இன்னும் புகழையும் சம்பாதிப்பார் என்று இவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.