அந்த படத்துக்கு அப்புறம் தான் நான் மாறிட்டேன்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிவேதா பெத்துராஜ்..!

அந்த படத்துக்கு அப்புறம் தான் நான் மாறிட்டேன்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நிவேதா பெத்துராஜ்..!

தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்த பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ் முதன் முதலில் இவர் ஒருநாள் கூத்து எனும் திரைப்படத்தின் மூலமாக 2016ல் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இருந்து நிவேதா பெத்துராஜ்க்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது.

நடிகை நிவேதா பெத்துராஜ்:

தமிழில் வெகு சீக்கிரத்திலேயே அடுத்த அடுத்த படங்களில் நடித்து இங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்: கேமராவை தரையில் காலுக்கு கீழே வைத்து.. அது தெரிய.. லோ ஆங்கிளில் பிக்பாஸ் ஜூலி போஸ்!

ஒரு நாள் கூத்து திரைப்படம் முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் அடையாளத்தையும் தேடி கொடுத்ததால் அடுத்ததாக பொதுவாக எம்மனசு தங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 

அதன் பின்னர் டிக் டிக் திமிரு புடிச்சவன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த ஆலா வைகுந்தபுர்ரமுலூ திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

இதனிடையே கார் ரேஸில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ் அப்போது அதில் ஈடுபடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

உதயநிதி ஸ்டாலின் உடன் கிசுகிசு:

இதற்கிடையில் நிவேதா பெத்துராஜ் உதயநிதி ஸ்டாலின் உடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார் காரணம் நிவேதா பெத்துராஜ்ஜிற்கு கார் ரேசிங்கில் பங்கேற்க பல கோடி உதவி செய்ததாகவும்,

அவருக்கு துபாயில் பல கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவை பரிசாக வாங்கி கொடுத்ததாகவும், பல்வேறு வதந்தி செய்திகள் வெளியாகியது.

இதையும் படியுங்கள்: ஆஹா.. என்னது.. சமந்தாவின் வீக் எண்ட் ட்ரீட்.. வீக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..

அத்துடன் சொகுசு கார் ஒன்றையும் அவருக்கு பரிசாக கொடுத்ததாக செய்திகள் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிர வைத்தது.

இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து நிவேதா பெத்துராஜ் இதற்கு தெளிவான விளக்கத்துடன் இது வெறும் வதந்தி செய்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

ஹோம்லியாக நடித்துவந்த நிவேதா பெத்துராஜ் திடீரென கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கினார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் குடும்ப பாங்கான ரோல்களில் நடித்துவிட்டு கவர்ச்சியாக நடித்தது குறித்து பேசிய நிவேதா பெத்துராஜ்,

திடீர் கவர்ச்சிக்கு காரணம் இதுதான்:

“நான் குடும்பத்திற்காக மிகவும் ஹோம்லியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்தேன். அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியான ரோல் ட்ரை பண்ணி பார்க்கலாம்னு நினைத்து ஆல வைகுண்டபுரம்லூ, தம்கி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாக நடித்தேன்.

உங்களுடைய சவுகரியம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது உங்களுக்கு புரிந்துவிட்டால் நிச்சயமாக உங்களால் எந்த மாதிரியான ரோலாக இருந்தாலும் நடிக முடியும் என்றார்.

இதையும் படியுங்கள்: சுற்றிலும் ஆண்கள்.. புலி ஜட்டி அணிந்து கொண்டு.. நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஏக்க பெருமூச்சு விடும்ரசிகர்கள்..!

அதற்கு ஆங்கர்…. தெலுங்கு சினிமாவில் மட்டும் கிளாமரா நடிச்சிருக்கீங்க? அப்போ உங்க பெற்றோர் எதுவும் சொல்லலயா? என கேட்டதற்கு….

அப்போ அவங்க புரிஞ்சிக்கிட்டாங்க இது தான் சினிமா என்று. நான் என் பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கும் வகையில் தான் நடிப்பேன். என் ரோலும், கவர்ச்சியும் அந்த அளவிற்கு தான் இருக்கும் என அவர் தெளிவாக பதிலளித்தார்.

   

--Advertisement--