அப்பா முக்கியமா..? அம்மா முக்கியமா..? பேரனின் பதிலை கேட்டு குலை நடுங்கிப்போன ரஜினி குடும்பம்..!

அப்பா முக்கியமா..? அம்மா முக்கியமா..? பேரனின் பதிலை கேட்டு குலை நடுங்கிப்போன ரஜினி குடும்பம்..!

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவரது மாஸான ஸ்டைலால் ரசிகர்கள் பலரைப் பெற்றிருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த ஒவ்வொரு திரைப்படமும் இவருக்கு நல்ல பிரபலத்தை தந்தது.

இதையும் படிங்க: 25 வருஷம் கழித்து முதல் மனைவியை வீட்டுக்கு கூட்டி வந்த சரத்குமார்.. ராதிகா என்ன செய்தார் தெரியுமா..?

 


பாலச்சந்தர் படங்கள் வில்லத்தனமாக நடித்த இவர் அண்மையில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்திலும் தனது நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியதை அடுத்து இளம் நடிகர்களே அஞ்சக்கூடிய அளவு இவர் நடிப்புத் திறன் நாளுக்கு நாள் மெருகேறுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

இந்நிலையில் ரஜினிக்கு இரண்டு மகள்கள் எடுப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் சினிமாவில் கவனத்தை செலுத்தி வரும் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார்.

நடிகர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தற்போது ரஜினிகாந்த் வீட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்ராவிடம் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

அப்பாவா? அம்மாவா?..

அந்த கேள்வியில் இவர் யாத்ராவிடம் உனக்கு அப்பா முக்கியமா? அம்மா முக்கியமா? என்ற கேள்வியை கேட்டதை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் சற்றும் எதிர்பாராத பதிலை தந்து யாத்ரா அனைவரையும் குலை நடுங்க வைத்து விட்டார்.

யாருமே எதிர்பார்க்காத பதிலை யாத்ரா தந்து இருக்கிறார் என்ற தகவல் இணைய பக்கங்களில் வெளி வந்து வைரலாகி வருகிறது.

பேரனின் பதிலால் அதிர்ச்சியில் உறைந்த ரஜினி குடும்பம்..

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் தங்களுடைய திருமண முடிவை பற்றி அறிவித்தார்கள். எனினும் முறையான விவாகரத்தை இருவரும் பெறவில்லை.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரின் மகன்கள் இருவரும் இருவருடன் வளர்ந்து வருகிறார்கள். அப்போது தந்தையுடன் செல்வதும், அவ்வப்போது அம்மாவுடன் இருப்பது என இருவரையும் விட்டுக் கொடுக்காமல் அந்த பிள்ளைகள் இருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான்.

எனினும் ரஜினிகாந்த் கேட்ட அப்பா முக்கியமா? அம்மா முக்கியமா? என்ற கேள்விக்கு யாத்ரா ரஜினியிடம் திரும்ப சில கேள்விகளை கேட்டு இருக்கிறார். அதன்படி உங்களிடம் உங்கள் அப்பா முக்கியமா? இல்லை அம்மா முக்கியமா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் தாத்தா.


என்னுடைய அம்மா ஐஸ்வர்யாவிடம் சென்று உனக்கு அப்பா முக்கியமா? அம்மா முக்கியமா? என்று கேளுங்கள் அல்லது என்னுடைய தந்தை தனுஷிடம் சென்று உனக்கு அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா? என்று கேளுங்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதே பதிலை நானும் சொல்கிறேன் என்று நெற்றி பொட்டில் அடித்தது போல் பதில் அளித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஜீன்ஸ் பேண்டில் ராஜலட்சுமி… ரோட்டில் அநாகரீக சீண்டல்.. அமெரிக்காவில் அரங்கேறிய அசிங்கம்…

இதனை அடுத்து இந்த பதிலை சற்றும் எதிர்பாராத ரஜினி மற்றும் அவரது குடும்பத்தார் குலை நடுங்கி போய் உள்ளார்கள்.

இந்த பதிலைக் கேட்ட ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் மீண்டும் தங்களுடைய குழந்தைகளுக்காக சேர்ந்து வாழலாமா? என்ற யோசனையில் இருப்பதாக தகவல்கள் வெளி வந்திருக்கிறது. இதனை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். விரைவில் காலம் இதற்கான பதிலை நமக்குச் சொல்லும்.