ரஜினியின் அந்த செயலை கண்டு துடித்துப்போன குமரிமுத்து.. அவரே கூறிய தகவல்..!

ரஜினியின் அந்த செயலை கண்டு துடித்துப்போன குமரிமுத்து.. அவரே கூறிய தகவல்..!

இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். அவரது கண் அசைவுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்கள் வருஷக்கணக்கில் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

அவருடன் ஒரு படத்தில், ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என பல நடிகர், நடிகைகள் ஆசைப்படுகின்றனர்.

கசப்பான அனுபவம்

ஆனால் அப்படிபட்ட ரஜினிகாந்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிடும் இடத்தில் ஒரு கசப்பான அவமானம் நேர்ந்திருக்கிறது. அதை நகைச்சுவை நடிகர் குமரிமுத்து ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சாதனை மனிதர்கள் எல்லாருமே ஒரு காலத்தில் சக மனிதர்களால் சங்கடமான சூழலை அனுபவித்தவர்கள்தான் என்ற உண்மையை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.

ரஜினிகாந்த்

நடிகர் குமரிமுத்துவை ஒருமுறை நான் பேட்டி எடுத்தேன். அப்போது குமரிமுத்துவே சொன்ன தகவல் இது என்று அதுகுறித்து வீடியோ ஒன்றில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியதாவது,

நடிகர் ரஜினிகாந்த் அப்போது நான்கு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இது 5வது படம். அந்த நான்கு படங்களிலும் அவர் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. புகழ் அடையவில்லை. இந்த படம் ஏவிஎம்மில் ஷூட்டிங் நடந்துக்கொண்டு இருந்தது.

இதையும் படியுங்கள்: சின்ன பசங்க.. அஞ்சு பேரு.. மனசாட்சி உறுத்துச்சு.. ஆனால்..” புவனேஸ்வரி ஓப்பன் டாக்..!

அப்போது அவர்களுக்கு உணவு இடைவேளையின் போது உணவு பரிமாறப்பட்டது. அப்போது பெரிய டெக்னிஷியன்கள், நடிகர், நடிகைகள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் என அவர்களுக்கு தனித்தனியாக உணவு வகைகள் பரிமாறப்படும்.

குமரிமுத்து

அப்போது அந்த படத்தில் நடித்த ரஜினிகாந்துக்கு உணவு பரிமாறப்பட்டது. ரஜினியுடன் அந்த படத்தில் நடித்த குமரிமுத்துவும் உடன் அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறார். புரடக்சன் பாய் ஒருவர்தான் அவர்களுக்கு உணவு பரிமாறி இருக்கிறார்.

ஆம்லேட் கிடைக்குமா

அப்போது ரஜினிகாந்த் ஒரு ஆம்லேட் தட்டில் பரிமாறப்பட்டிருக்கிறது. இன்னொரு ஆம்லேட் கிடைக்குமா என்று ரஜினிகாந்த், அந்த உணவு பரிமாறியவரிடம் கேட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நவரச நாயகன் கார்த்திக் பார்த்த தில்லாலங்கடி வேலைகள்.. பிரபல நடிகர் போட்டு உடைத்த ரகசியம்..!

கோழி இன்னும் முட்டை போடலை

அப்போது ஒரு மாதிரியாக ரஜினியை திரும்பி பார்த்த அந்த புரடக்சன் பாய், இன்னும் கோழி இன்னும் முட்டை போடலை என்று திமிராக பதில் அளித்திருக்கிறார்.

அதன்பிறகு ரஜினி எதுவும் பேசாமல் தட்டை பார்த்து குனிந்து சாப்பிட்டு இருக்கிறார். இதை அருகில் அமர்ந்து சாப்பிட்டபடி பார்த்துக்கொண்டிருந்த குமரிமுத்து உள்ளிட்ட சக நடிகர்கள் பயங்கர கடுப்பாகி இருக்கின்றனர். என்ன இந்த புரடக்சன் பாய் இப்படி நடந்துக்கொள்கிறாரே என பயங்கரமாக கோபப்பபட்டு இருக்கின்றனர்

மனம் பொறுக்காமல்…

ஒரு ஆம்லேட் எக்ஸ்ட்ராவாக கேட்டதற்கு ரஜினிக்கு நேர்ந்த அவமானத்தை நேரில் கண்டு துடித்துப்போன குமரிமுத்து.. அவரே மனம் பொறுக்காமல் பல ஆண்டுகளுக்கு பின் கூறிய தகவல்தான் இது. அப்படி என்றால் ரஜினி மனதில் இன்னும் கூட அந்த அவமானத்தில் வலி இருந்திருக்க கூடும்.