நீச்சல் உடையில் நடிகை ராஷ்மிகா மந்தனா குளுகுளு போஸ்..! – வைரலாகும் நச் போஸ்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. காரணம், இந்த புகைப்படங்களில் அம்மணியின் அழகு வழக்கத்திற்கு மாறான கிளாமராக காட்சியளிப்பது தான்.

ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி போய் கிடக்கின்றனர். தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா அதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருந்தார்.

இதற்கு காரணம் நடிகர் விஜய்தேவார கொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது தான். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

கன்னடத்தில் தான் இவர் முதலில் அறிமுகமானார் என்றாலும் கூட அந்த படத்தின் மூலம் பல சர்ச்சைகளையும் சிக்கினார். காரணம், அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒருவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் அம்மணி.

ஆனால், அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய திருமணத்தை நிறுத்திவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டன தற்போதும் இந்த சர்ச்சைகள் இவரை பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

--Advertisement--

ஒட்டுமொத்த கன்னட திரை உலகமும் இவர் மீது கடும் கோபத்தில் இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். தன்னுடைய சொந்த வாழ்க்கை மீது கன்னட சினிமா ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னுடைய திரை வரலாறு குறித்து பேசும் பொழுது கன்னட சினிமாவில் அதாவது நடிகையாக அறிமுகமான கன்னட சினிமாவை பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

இது கன்னட சினிமா ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இதனால் கன்னட சினிமாவில் பலரும் ராஷ்மிகா மந்தனா எதிரான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

குறிப்பாக காந்தாரா திரைப்படத்தின் மூலம் பிரபலமான ரிஷப் செடி ராஷ்மிகா மந்தனா குறித்து கேள்வி போது  அவரை பற்றி பேச எதுவும் இல்லை. அவரை பற்றி கேட்காதீர்கள் என்று பேசினார்.

மேலும் அவருடன் நான் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன் என்னுடைய படத்தில் ராஷ்மிகா மந்தனா-வை ஜோடியாக போட மாட்டேன் என்று பேசியிருந்தார்.

முக்கிய காரணம் என்னவென்றால் இவர் முதலில் அறிமுகமான திரைப்படத்தை தயாரித்தது வேறு யாரும் கிடையாது சாட்சாத் ரிஷப் செட்டியே தான். தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் வரை வந்து திருமணத்தை நிறுத்தியதன் காரணமாக ராஷ்மிகா மந்தனா மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் இவர் இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை உயர்த்தும் முடிவில் இருக்கிறார். மேலும் இணையப் பக்கங்களில் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.