“16 வயசுலேயே அதை பண்ணிட்டேன்.. வீட்ல தெரிஞ்ச அப்புறம்..” ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்..!

“16 வயசுலேயே அதை பண்ணிட்டேன்.. வீட்ல தெரிஞ்ச அப்புறம்..” ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்..!

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா நடித்த கீதா கோவிந்தம் படம், ராஷ்மிகா மந்தனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை வரவேற்பை பெற்றுத் தந்தது.

அதன்பிறகு தெலுங்கில் உருவாக்கப்பட்ட பான் இந்தியா படமான புஷ்பா தி ரைஸ் படத்தில், அல்லு அர்ஜூனாவுடன் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகி, பிளாக் பஸ்டர் மூவியாக அமைந்தது. இந்த படத்தை அடுத்து முன்னணி நாயகியாக மாறினார் ராஷ்மிகா.

தமிழில் விஜய் நடித்த வாரிசு படத்தில், ராஷ்மிகா நடித்தார். ஆனால் அந்த படம் போதிய வெற்றி பெறாத வகையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தமிழில் பெற முடியவில்லை.

ராஷ்மிகா மந்தனா..

இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற ராஷ்மிகா மந்தனா, அனிமல் படத்தில் ரன்வீர் கபூருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக கிளுகிளுப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

--Advertisement--

அனிமல் படம் கடுமையான விமர்சனங்களில் சிக்கியிருந்தாலும், வசூல் ரீதியாக அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. பல நூறு கோடிகளை குவித்திருக்கிறது.

இப்போது புஷ்பா படத்தின் 2ம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

விரைவில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

16 வயசுலையே..

நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய கையில் Irreplaceable என்று தன்னுடைய 16 வயதிலேயே டாட்டு குத்திக் கொண்டதாக கூறியுள்ளளார்.

மேலும் இதனை வீட்டில் சொல்லிவிட்டு செய்தால் கண்டிப்பாக டாட்டூ போட விட மாட்டார்கள் என்பதால் டாட்டுவை போட்டுவிட்டு வந்து வீட்டில் காட்டினேன். வீட்டில் என்னை திட்டினார்கள்.

ஆனால் டாட்டூ குத்திய பிறகு அதனை நீக்குவது கடினம் என்பதால் அப்படியே விட்டு விட்டார்கள் என்று கூறியுள்ளளார் ராஷ்மிகா மந்தனா.

இதனை அறிந்த ரசிகர்கள்.. அடியே பேதில போவான்.. நீ ஒரு ஆர்டிஸ்ட்ன்னு நிருபிச்சிட்ட என்று ஜீ.பி.முத்து போல மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.