“என் பாவாடைக்குள் கேட்ட அந்த சத்தம்..” எனக்கும் ரஜினிக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்.. கூச்சமின்றி கூறிய ஷோபனா..!

“என் பாவாடைக்குள் கேட்ட அந்த சத்தம்..” எனக்கும் ரஜினிக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்.. கூச்சமின்றி கூறிய ஷோபனா..!

மலையாளத் திரைப்படத்தில் ஆரம்ப காலங்களில் நடித்த நடிகை ஷோபனா இதனை அடுத்து தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழி படங்களில் கிட்டத்தட்ட 230 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.


பரதநாட்டிய கலைஞரான இவர் 1990-களில் முன்னணி நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இவருக்கு தேசிய விருதுகளும், கேரள மாநில திரைப்பட விருதுகளும் கிடைத்திருக்கிறது.

நடிகை ஷோபனா..

இவர் தமிழில் நடித்த திரைப்படங்களான எனக்குள் ஒருவன், விரதம், இது நம்ம ஆளு ,சட்டத்தின் திறப்பு விழா, பாட்டுக்கொரு தலைவன், சிவா, பொன்மனச் செல்வன், வாத்தியார் வீட்டுப்பிள்ளை, எங்கிட்ட மோதாதே, மல்லு வேட்டு மைனர், சத்தியவாக்கு, துறைமுகம் ,தளபதி, போடா போடி போன்ற திரைப்படங்கள் திரையுலகம் இருக்கும் வரை இவர் பெயரை சொல்லும்.

பல படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு அதிகளவு ரசிகர்களும் இருக்கிறார்கள். இவரது நடனத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் காத்திருந்தது என்று சொன்னால் மிகை ஆகாது.


என் பாவாடைக்குள் கேட்ட அந்த சத்தம்..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்று கூச்சமின்றி பேசிய நடிகை ஷோபனா சிவா திரைப்படத்தில் இடம் பெற்ற இரு விழியின் வழியே நீயா வந்து போனது என்ற பாடலின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ராத்திரி முழுசும் தூங்க விடாமல் ஜில் நடிகர் அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுமை.. காலையில் அம்மா நடிகை எடுத்த முடிவு..

அந்த பேட்டியில் கூறியதாவது இந்த பாடல் காட்சியில் மழையில் நனைந்தபடி சில காட்சிகள் இடம் பெற்றிருக்கும். மழையில் நனைந்த படி இன்று படப்பிடிப்பு இருக்கிறது என்று என்னிடம் யாரும் கடைசி வரை கூறவே இல்லை.


எனினும் கடைசி அரை மணி நேரம் முன்பு தான் மழையில் நனையும் காட்சி பற்றி கூறினார்கள். பொதுவாக ஈரமான உடையை அணிந்து கொண்டு ஆட வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப உள்ளாடைகள் அணிய வேண்டும். ஆனால் என்னிடம் அன்று எதுவும் சொல்லாத காரணத்தால் என்னிடம் உள்ளாடை ஏதும் இல்லை.

ரஜினிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..

வீட்டுக்கு வரலாம் என்றால் அதற்காக அதிக நேரமும் எடுக்க முடியாது. இதனை அடுத்து ஒட்டு மொத்த பட குழுவும் தயாராக இருந்த நேரத்தில் அரை மணி நேரத்தில் படப்பிடிப்பு எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பெரிய படக்குழு, பெரிய தயாரிப்பு நிறுவனம் நம்மால் எதுவும் கெட்டுவிடக் கூடாது என்ற பயம் உள்ளுக்குள் இருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பானது ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது ஒரு மேடை மீது ஒரு பிளாஸ்டிக் விரிப்பை வைத்திருந்தார்கள். அதை எடுத்து என் பாவாடைக்குள் நான் சுற்றிக்கொண்டேன். அதன் பிறகு நான் தயார் என்று படக்குழுவிற்கு கூறினேன். படப்பிடிப்பு தொடங்கியது அந்த காட்சியில் ரஜினி என்னை தூக்கி நடனம் ஆடுவது போன்ற காட்சியை படமாக்க வேண்டும்.

இதையும் படிங்க: இளம் நடிகர் செய்த சீண்டல்.. குமுறி அழுத பானுப்ரியா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!


இதனை அடுத்து அந்த பிளாஸ்டிக்கின் சத்தம் கோரகோரவென கேட்டது. அப்போது ரஜினி ஷாக் ஆனார். என்ன இது என்று குழம்பினார். எனக்கு பயமாகிவிட்டது. எங்கே பட குழுவிடம் இதைப் பற்றி சொல்லிவிடுவாரோ? என்று பயந்தேன்.

ஆனால் ரஜினிகாந்த் எதையும் படக்குழு இடம் சொல்லவில்லை. அந்த காட்சி படமாக்கப்பட்டு முடித்தது. இது இன்று வரை எனக்கும் ரஜினிக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் என்று கூச்சமின்றி வெளிப்படையாக நடிகை ஷோபனா பேசியிருக்கிறார்.

இதனைப் பார்க்க  இந்த லிங்கில் https://youtu.be/OD3HZqfgS_c?t=106 சென்று பார்க்கலாம்.

இந்த விஷயம் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாக மாறி இருப்பதோடு பேசும் பொருளாகவும் மாறி விட்டது.