பயன்படுத்திய ஆணுறையை கையில் கொடுத்து.. இதை பண்ண சொன்னார்.. முன்னணி நடிகர் குறித்து ஸ்ரீரெட்டி..!

நடிகை ஸ்ரீரெட்டி குறித்து புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. பட வாய்ப்புக்காக தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டனர் என பல்வேறு நடிகர்கள் மீது புகார் கொடுத்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு சின்னத்திரை நடிகர்கள், சினிமா நடிகர்கள் முதல் பிரபல நடிகரும் தற்போது அமைச்சராக இருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் வரை கூட புகார் கொடுத்திருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

ஒரு கட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் என்றால் யார் என்று எனக்கு தெரியாது என கருத்து பதிவு செய்திருந்தார் ஸ்ரீ ரெட்டி. தமிழ் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் மீதெல்லாம் பகீர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில் குறிப்பாக பிரபல தெலுங்கு நடிகர் கிர்ஷா ஒரு முறை நட்சத்திர ஹோட்டலுக்கு என்னை அழைத்தார். நானும் சென்றேன். பட வாய்ப்புக்காக அவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்.

--Advertisement--

இறுதியில் அவர் பயன்படுத்திய ஆணுறையை என்னுடைய கையில் கொடுத்து இதை சுத்தம் செய் என்று கேட்டார்.

எனக்கு கண்ணீர் வந்து விட்டது. பட வாய்ப்புக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைத்து அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டேன்.

அதன் பிறகு இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது நான் சொல்வதை செய் என்று கூறினார். வேறு வழியில்லாமல் அதனை செய்தேன்.

அதன் பிறகு அதை கீழே போட்டு விடு என்று கூறினார். நான் என் மீது நம்பிக்கை இழந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

அதன் பிறகு எனக்கு ஒரு வேளை உணவு கூட வாங்கி கொடுக்காமல் அந்த ஹோட்டல் அறையின் கட்டணத்தை கூட செலுத்தாமல் என்னை விட்டுவிட்டு சென்று விட்டார் என கூறிய ஸ்ரீ ரெட்டி. இது தான் என்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவம் இது எனவும் பதிவு செய்திருக்கிறார்.