முக்கிய புள்ளியுடன் ரகசிய பிணைப்பில் இருந்த நடிகை சுகன்யா.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

தமிழ் சினிமாவில் நடிகைகள் நடிக்க வந்து, பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். தொடர்ந்து அவர்கள் சில ஆண்டுகள் அல்லது பல ஆண்டுகள் நடித்தாலும், ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கை என்ற இல்லற வாழ்க்கைக்கு செல்லும்போது, சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படுகிறது.

சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகும், படங்களில் நடிக்கின்றனர். ஆனால் அந்த நடிகைகள் அதிக நாட்களுக்கு நீடிப்பதில்லை. அதற்கு காரணம் திருமணம் ஆன நடிகைகளுக்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், வெகு சீக்கிரமாகவே இமேஜ் போய் விடுகிறது.

சுகன்யா

கடந்த 1990களில், முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இயக்குனர் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து சோலையம்மா, எம்ஜிஆர் நகரில், சின்னக் கவுண்டர், திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றிவேல், செந்தமிழ் பாட்டு, மகாநதி, சின்ன மாப்ளே உள்ளிட்ட பல படங்களின் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

சுகன்யா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்தவர். இவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர். தனது 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவின் செட்டிலானார்.

--Advertisement--

ஒரே ஆண்டில் விவாகரத்து

ஆனால் ஒரே ஆண்டில் கணவரை பிரிந்து வந்து விட்டார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சுகன்யா, மிக அழகான நடிகையாக இருந்ததால் சினிமாவில் இன்னும் பல படங்களில் நடித்திருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பல ஆண்டுகளாக அவர் படங்களில் நடிப்பதில்லை.

இதுகுறித்து நடிகை சுகன்யா சமீபத்தில் இதுபற்றி ஒரு நேர்காணலில் கூறும் போது, நான் சினிமாவில் நடிக்காமல், வேண்டும் என்றே விலகி இருக்கவில்லை. எனக்கு சினிமாவில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு வரவில்லை. அதனால் நான் நடிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறினார்.

பிரபல அரசியல்வாதியுடன்…

சுகன்யா, விவாகரத்துக்கு பிறகு பிரபல அரசியல்வாதியுடன் ரகசிய உறவில் இருந்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இது பல ஆண்டுகளுக்கு முன்பு, அன்றே பத்திரிகைகளில் காரசாரமாக இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு சுகன்யா தரப்பில் இருந்து எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிட த்தக்கது. அரசியலில் முக்கியப் புள்ளி ஒருவருடன் தொடர்பில் இருந்தால்தான்இவர் திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டு, அது விவாகரத்தில் முடிவடைந்தது.

இமேஜை காலி செய்து விட்டது

அதுவே சினிமா வாழ்க்கையிலும் இவரது இவரை இமேஜை காலி செய்து விட்டதாகவும் ஒரு தகவலை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

முக்கிய புள்ளியுடன் ரகசிய பிணைப்பில் இருந்த நடிகை சுகன்யா தான், தன் சினிமா எதிர்காலத்தையே இருண்ட காலமாக்கி கொண்டார் என, அந்த நேர்காணலில் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட தகவல், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.