கமல் இரண்டாவது மனைவியின் தற்போதைய பரிதாப நிலை..!

கமல் இரண்டாவது மனைவியின் தற்போதைய பரிதாப நிலை..!

ஒரு காலத்தில் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை சரிகா தாகூர் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி 1980 களின் மத்தியில் ஹிந்தி, மராத்தி மொழிப்படங்களில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

இதனிடையே நடிகர் கமல்ஹாசன் தனது முதல் மனைவியான வாணி கணபதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

கமல் முதல் மனைவியை விவாகரத்து செய்த காரணம்:

இதற்கான காரணம் கமல்ஹாசன் வாணி மீது ஒரு அக்கறையோடு ஒரு மனைவி என்ற ஒரு பாசத்தோடு பழகவே இல்லையாம்.

இதையும் படியுங்கள்: நடிகர் சூர்யா தங்கை பற்றி இதுவரை வெளிவராத ரகசிய தகவல்..!

அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்த பின்னர் கூட என்ன ஏது? என்று கமல்ஹாசன் ஒரு கணவராக தன்னை விசாரிக்காதது வாணிக்கு மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் ஏற்படுத்தியதாம்.

இதனை மனமுடைந்துபோன வாணி கணபதி அவரை விட்டு பிரிந்து விட்டதாக செய்திகள் கூறுகிறது. இதற்கான காரணம் கமல் நடிகை சரிகா உடன் நெருங்கி பழகி வந்தது தானாம்.


நடிகை சரிகாவுடன் லிவிங் லைஃப்:

சரிகாவுடன் ரகசிய முறையில் உறவு வைத்திருந்த கமல்ஹாசன் வாணியை விவாகரத்து செய்வதற்கு முன்னரே சரிகாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: கனிமொழி கணவர்களின் கதை.. வாழ்கையை வெறுத்து சாமியார் ஆன முதல் கணவர்..!

குஜராத் மாநிலம் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சரிகா அந்த காலத்திலேயே சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தார் அதன் மூலம் தான் சரிகாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து ஹீரோயின் ஆனார்.

சரிகாவும் நான்கு வயதிலேயே கமல்ஹாசனை போன்று குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்தார். மார்க்கெட்டின் உச்சத்தில் சிறந்த நடிகையாக கொண்டிருந்தபோதே…

கமலின் காதலை ஏற்று 1988ல் கமலை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழு முழுக்கு போட்டு விட்டார். கமலின் இரண்டு மகளான ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் இருவரும் சரிகாவுக்கு பிறந்த குழந்தைகள் தான்.

இதையும் படியுங்கள்: வரலட்சுமி உனக்கு பிடிச்ச கணவரை நீயே.. மகள் குறித்து நடிகர் சரத்குமார் வெளியிட்ட பதிவை பாருங்க..!

திருமணத்திற்கு பின்னர் சரிகா படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கமல்ஹாசனின் படங்களில் தொடர்ந்து அவருக்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தார்.

ஹேராம் படத்தில் சிறந்த காஸ்டியூம் டிசைனருக்கான தேசிய விருது சரிக்கா பெற்றார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு

காதலிக்காக சரிகாவை விவாகரத்து செய்த கமல்:

2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் அதற்கான காரணமும் முதல் மனைவியை போன்ற கதை தான்…

ஆம் சரிக்கா உடன் இருக்கும் போதே நடிகை ஸ்ரீ வித்யாவை கமல் காதலித்து தகாத உறவில் இருந்தது தான் என்று கூறப்படுகிறது.