கனிமொழி கணவர்களின் கதை.. வாழ்கையை வெறுத்து சாமியார் ஆன முதல் கணவர்..!

கனிமொழி கணவர்களின் கதை.. வாழ்கையை வெறுத்து சாமியார் ஆன முதல் கணவர்..!

தமிழக அரசியல் தலைவர் மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவியின் மகளான கனிமொழியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாடக நடிகையாக இருந்து கலைஞரின் மூன்றாவது மனைவியான ராசாத்தி அம்மாளுக்கு பிறந்த ஒரே மகள் தான் கனிமொழி கலைஞர் என்ற அடைமொழியுடன் பொதுவெளியில் வந்த கனிமொழியின் பிறப்பே கலைஞருக்கு மிகப்பெரிய தலைவலி உண்டாக்கியது.

இதையும் படியுங்கள்: வரலட்சுமி உனக்கு பிடிச்ச கணவரை நீயே.. மகள் குறித்து நடிகர் சரத்குமார் வெளியிட்ட பதிவை பாருங்க..!

தகாத உறவில் பிறந்த கனிமொழி:

1968 ஆம் ஆண்டில் அண்ணா தலைமையிலான மந்திரி சபையில் பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி இருந்த சமயத்தில் தான் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கனிமொழி பிறந்தார்.

அப்போது அவரது பிறப்பின் பதிவேட்டில் அவரது தந்தை மு கருணாநிதி என பதிவிட்டிருந்தார்கள் அப்போது கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாளுக்கும் திருமணமே நடைபெறவில்லை.

இதை மோப்பம் பிடித்த சில பத்திரிகைகள் இதனை செய்தியாக வெளியிட்டனர். உடனே கருணாநிதி இது எனக்கு பிறந்த குழந்தை இல்லை. எனக்கும் ராசாத்தி அம்மாளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டார்.

இந்த விஷயத்தை அறிந்த அண்ணா, கருணாநிதியை கண்டித்து அவரை எச்சத்து ராஜாத்தி அம்மாளை திருமணம் செய்து கொள்ள கூறியுள்ளார். அதன் பின்னரே கருணாநிதி ராஜாத்தி அம்மாளை மூன்றாவது மனைவியாக ஆக்கிக் கொண்டார்.

சர்ச் பார் கான்வென்டில் பள்ளி படிப்பை முடித்த கனிமொழி கனிமொழியின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் கருணாமூர்த்தி என்று தான் இன்றளவும் இருந்து வருகிறது.

திருமணம் , விவாகரத்து:

கருணாநிதியன் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றார் . அதன் பின்னர் சிவகாசியில் உள்ள பெரும் தொழிலதிபர் குடும்பத்தில் 1989 ஆம் ஆண்டு அதிபன் போஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: இரண்டாம் மனைவியான நடிகை அமலா.. பலரும் அறியாத ரகசியம்..!

பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பின்னர் சிங்கப்பூரில் வசிக்கும் தொழிலதிபரான அரவிந்துடன் பழக்கம் ஏற்பட்டு 1997 ஆம் ஆண்டு அவரை மறுமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு பிறந்த வளர்ந்தவர் ஆதித்யா என்கிற ஆண் குழந்தை. கனிமொழிக்கு பெரிதாக அரசியலில் ஆர்வம் இல்லை என்றாலும் தனது தாயின் ஆர்வத்தாலும் அவரது விடாப்பிடியாலும் அரசியலுக்கு வந்து திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இதையும் படியுங்கள்: கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் சாமியார் ஆன முன்னணி நடிகை.. யாரு காரணம் தெரியுமா..?

திமுகவின் சீனியர்களை ஓரம் கட்டி விட்டு திமுகவின் டெல்லி முகமாக தற்போது வரை இருந்து வருகிறார். தமிழக அரசியலில் அவர் கால் பதித்து தனக்கு போட்டியாக வந்து விடக்கூடாது என்பதில் மு க ஸ்டாலின் மிகவும் தெளிவாக இருந்து வருகிறார்.