நீ என்ன கண்ணகி பக்கத்து வீடா..? இல்ல, கண்ணகி சொந்தக்காரியா.? – திரிஷா-வை விளாசும் பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து பேசியிருந்த ஒரு தகவல். லியோ திரைப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார் என்றதும் அந்த படத்தில் திரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சிகள் ஏதேனும் இடம்பெரும் என ஆசையாக இருந்தேன்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என பேசியிருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. திரிஷாவிற்கு ஆதரவாக பல்வேறு நடிகர்கள் கண்டன குரல்களை கொடுத்தனர்.

ஆரம்பத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்த நடிகர் மன்சூர் அலிகான். வழக்கு போலீஸ் ஸ்டேஷன் என சென்றதும் திரிஷாவின் மனது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

இதனால் இந்த விவகாரம் அடங்கி போனது. இந்நிலையில், பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் பேசியதாவது, மன்சூர் அலிகான் பார்ப்பதற்கு தான் கோமாளி போல இருப்பார்.

ஆனால் கைவசம் ஏகப்பட்ட விஷயம் வைத்திருக்க கூடியவர். அவரை ஒரு பகடைக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். நான் நடிகைகளை பற்றி அவதூறாக பேசவில்லை. நடிகை கூறியதை தான் நான் பேசுகிறேன்.

ரஜினியை விடவா மன்சூர் அலிகான் பேசினார். இருவர் பேசியதும் தவறு கிடையாது. ரஜினி பேசியதும் தவறு கிடையாது. மன்சூர் அலிகான் பேசியதும் தவறு கிடையாது.

லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட மேடையில் திரிஷா இருக்கும் பொழுது அவருடன் ரேப் சீன் இருக்கும் என நினைத்தேன். அதே சமயம் மடோனா-வும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என பேசினார்.

அப்போது நடிகை திரிஷா சிரித்தார். வெற்றி விழாவில் பேசியது தப்பில்லை. ஆனால் பிரஸ்மீட்டில் பேசினால் மட்டும் தப்பா..? மன்சூர் அலிகான் தவறாக எதுவும் பேசவில்லை.

அப்போதே தித்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு இருக்கலாம். ஆனால், அவர் ஏன் அதை செய்யவில்லை..! ஏனென்றால்.. அவர் பேசியது தவறு என அவர் உணரவில்லை. அவர் பேசியது தவறும் கிடையாது.

திரிஷாவை பார்த்து கேட்கிறேன்.. நீ என்ன கண்ணகி விட்டு பக்கத்து வீட்டுக்காரியா..? அல்லது கண்ணகியின் சொந்தக்காரியா..? இது கிழக்கு கடற்கரைச் சாலையில்தலைக்கேறிய போதையில் டான்ஸ் ஆடி மயங்கிய நிலையில் அவருக்கு இருக்கும் நல்ல பெயர் காரணமாக போலீசார் வீட்டில் விட்டார்கள்.

இதேபோல மன்சூர் அலிகான் கண்டித்து அனுப்பி இருக்கலாம். மட்டுமில்லாமல் த்ரிஷாவின் குளியல் அறை காட்சிகளை யாரோ ஒருவர் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

அப்போது நடிகர் சங்கம் என்ன செய்தது..? 50 வயதாகும் ஒரு நடிகருக்கு 39 வயதாகும் நடிகை திரிஷா உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கிறார். அது இனித்தது ஆனால் மன்சூர் அலிகான் தொடாமல் பேசியது உங்களுக்கு வலிக்கிறதா என்று கடுமையாக பேசி இருக்கிறார் நடிகர்

   

--Advertisement--