இவன் கூட எப்படி அதை பண்ணியோ.. ரச்சிதா மகாலட்சுமிக்கு ஹின்ட் கொடுத்த பிக்பாஸ் நடிகை..!

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்கள் யார் இறுதி வரை செல்வார்? யார் இறுதியில் வெல்வார்? என்று கணிக்க முடியாத நிலை நிலவுகிறது.

இதனை அடுத்து போட்டியாளர்களுக்கு மிகவும் கடுமையான டாஸ்க் வழங்கப்பட்டு வருவதோடு, கடந்த வாரம் டிக்கெட் ஃபினாலே டாக்ஸ் நடந்ததை அடுத்து இது விஷ்ணு அதிக புள்ளிகள் பெற்று இருந்தார்.

இதற்கிடையில் போட்டியாளர்களிடையே சண்டை அடிக்கடி நடந்து வரும் வேளையில் பல நாட்களாக விசித்ரா மற்றும் தினேஷ் ஒருவரை ஒருவர் குறை சொல்லி வாக்குவாதத்தை ஏற்படுத்திய வண்ணமே இருந்தார்கள்.

மேலும் நேற்று நடந்த எபிசோடில் தினேஷ் செய்த செயலால் கடுப்பாகி போன விசித்ரா கேமரா முன் நின்று கோபமாக பேசிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

இந்நிலையில் சில மூஞ்சிகளை பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது. இவர்கள் இருந்து என்ன பிரயோஜனம். இந்த பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட் ஆக இருக்க முடியாத இவனோடு எப்படித்தான் குடித்தனம் பண்ண முடியும் என்று சூசகமாக புலம்பி இருக்கிறார்.

மேலும் இவரோடு ஒன்றாக இருக்க முடியாது விட்டு விட்டு ஓடி விட வேண்டியது தான். திரும்பி கிளம்பி வந்துடம்மா தாயே என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இவன் கூட குடும்பம் நடத்துவதற்கு பதிலா தனியாவே வாழ்ந்திடலாம் என்ற வார்த்தைகளை சொல்லி கவனத்தை திசை திருப்பி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் விசித்ரா இது போல பேசியது ரச்சிதாவை மனதில் வைத்துக் கொண்டுதான் இப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் கண்டபடி விசித்ராவை விமர்சித்த வண்ணம் பதிவுகளை தொடர்ந்து போட்டு வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் இப்படி எல்லாம் ஒருவரை பற்றி ஜாடை பேச முடியும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது தான் அதைப் பற்றி பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.