பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இந்த வயசுல விசித்ரா செஞ்ச வேலையை பாருங்க… ஒடம்பு தாங்குமா அடி ஆத்தே..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மடிப்பு அம்சா என அழைக்கப்பட்டவர் விசித்ரா. சிலுக் ஸ்மிதா, ஷகிலா அளவுக்கு விசித்ராவும் தமிழ் சினிமாவில் அதிக கவர்ச்சி காட்டி ஒரு காலத்தில் நடித்தவர். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் அவரை காண முடியவில்லை.

தலைவாசல், முத்து, வில்லாதி வில்லன், சீதனம், பெரிய குடும்பம் என பல தமிழ் படங்களில் நடித்தவர். தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக படங்களில் நடிக்காமல், கேரளாவில் செட்டில் ஆகி விட்டார்.

சமீபத்தில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற விசித்ரா, விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7ல் பெண் போட்டியாளராக கலந்துக் கொண்டார். ஆரம்பம் முதலே அவரது பேச்சு, நடவடிக்கையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். பல விதங்களில் மிகவும் மெச்சூரிட்டியாக அவர் நடந்துக்கொண்டதாக பலரும் பாராட்டினர். கமலும் அவரை அவ்வப்போது பாராட்டினர்.

கேரளா, மலம்புழாவில் தெலுங்கு பட ஷூட்டிங் சென்ற போது அந்த படத்தின் ஹீரோ, நைட் ரூமுக்கு வந்துடு என அழைத்ததை கூறி, பிக்பாஸ் வீட்டுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாதான் என சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலானது.

இந்த சீசனில் விசித்ரா தான் பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் 14 வாரங்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த வந்த நிலையில், அவர் அதை மிக சந்தோஷமாகவே கொண்டாடி வருகிறார்.

தனது கணவர் மற்றும் பிக்பாஸ் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற முன்னாள் போட்டியாளர் நடிகை ரித்விகா, நடிகை அம்மு ஆகியோருடன் சந்தோஷமாக நடனமாடும் விசித்ராவின் வீடியோ, இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. சுடிதார் உடையில், தலையில் ரோஜா பூக்களுடன் அலங்கரிக்கப்பட்ட அறைக்குள், குத்தாட்டம் போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார் நடிகை விசித்ரா.