தீயாய் பரவும் விஷால் பேசிய ஆடியோ.. அதிரும் கோலிவுட் வட்டாரம்.. பரபரப்பில் பிரபலங்கள்..!

சமீப காலமாக நடிகர் விஷால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். அவர் வாய் திறந்து பேசினாலே, ஏதாவது ஒரு வில்லங்கம் வந்து விடுகிறது. இப்போதுதான் ஓட்டு போட சைக்கிளில் வந்து ஒரு புது பிரச்சனையை கிளப்பி விட்டார்.

ரத்னம் பிரமோ நிகழ்ச்சிகளில் கதாநாயகி பிரியா பவானி சங்கரை வரவிடாமல் தடுத்தார் என்று குற்றச்சாட்டும் எழுந்தது. இப்போது திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் அந்த படம் ரிலீஸ் ஆவதிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஷால்

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் படம், வரும் 26 ஆம் தேதி அதாவது நாளை வெள்ளிக்கிழமை இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை டைரக்டர் ஹரி இயக்கி இருக்கிறார்.
இந்த படம் நாளை வெளியாகும் என்ற நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்த படம் வெளியாவதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்

அதாவது திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களின் தியேட்டர் உரிமையாளர் சங்கம் சார்பில் நடிகர் விஷாலுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், நடிகர் விஷால் வினியோகஸ்தர்களுக்கு பணம் தர வேண்டி இருப்பதால் அந்த பணத்தை தராமல் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அதில் கூறியிருப்பதாக தெரிய வருகிறது.

--Advertisement--

நான் யாருக்கும் பணம் தர வேண்டியதில்லை

இதுகுறித்து நடிகர் விஷால் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஷால் கூறியிருப்பதாவது, அந்த மாதிரியாக நான் யாருக்கும் எந்த பணமும் தர வேண்டியது இல்லை. அதற்கான எந்த முகாந்திரமும், ஆதாரமும் இல்லை. இதற்கு பெயர்தான் கட்டப்பஞ்சாயத்து.

எனக்கு கடிதம் அனுப்பிய நபருக்கும் எனக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் குறித்து சம்பந்தமும் இல்லை. நான் யாருக்குமே பணம் தர வேண்டியதில்லை. இப்படி சம்பந்தமே இல்லாமல், என் படம் வெளியாவதை தடுப்பதற்காக இப்படி செய்திருப்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.

கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்

நடிகர் விஷாலுக்கே இந்த நிலைமை என்றால் புதுமுக நடிகர் ஒருவராக இருந்தால், புதுமுக தயாரிப்பாளர் என்றால் அவர்களது நிலை என்ன என்று எண்ணிப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

என்னையே இப்படி சுற்றலில் விடுகிறீர்கள் என்று தான் வருத்தப்படுகிறேன். எந்த விதத்திலும் நான் வந்து யாருக்கும் பணம் தர வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே என் படத்தை வெளியிடாமல் தடுப்பதற்காக இந்த மாதிரி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்.

இதற்கான நடவடிக்கை எடுக்க எனக்கு தெரியும். அதற்கான முயற்சிகளை என்னை எடுக்க வைத்து விடாதீர்கள் என்று அதில் விஷால் பேசியுள்ளார்.

நடிகர் விஷால் பேசிய ஆடியோ இந்த வீடியோ தீயாக பரவி வருகிறது. இதைக்கேட்டு கோலிவுட் வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது. பரபரப்பில் படத்தில் நடித்த மற்ற பிரபலங்களும் உள்ளனர்.