ரவீந்தர் அனுப்ப்பிய அந்த மெசேஜில் விழுந்துட்டேன்.. ரகசியம் உடைத்த VJ மகாலட்சுமி..!

ரவீந்தர் அனுப்பிய அந்த மெசேஜில் விழுந்துட்டேன்.. ரகசியம் உடைத்த VJ மகாலட்சுமி..!

சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகைகள் மறுமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அந்த வகையில் VJ மகாலட்சுமி எப்படி ரவீந்திரனின் வலையில் விழுந்த என்ற ரகசியத்தை தற்போது உடைத்திருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்கள் அனைவரும் எப்படி ரவீந்தர் கோல் போட்டு VJ மகாலட்சுமியை தனது மனைவியாக மாற்றிக் கொண்டார் என பேசி வருகிறார்கள்.

VJ மகாலட்சுமி..

ஆரம்ப நாட்களில் ஆன்கராக பணிபுரிந்த மகாலட்சுமி நாள் செல்லச் செல்ல சீரியல் நடிகையாக மாறி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஏற்கனவே திருமணம் ஆன இவர் முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.


இவர்கள் திருமணத்திற்கு பிறகு மிகவும் ஃபேமஸான கப்புலாக வலம் வந்த இவர்கள் அடிக்கடி youtube சேனல்களில் பேட்டி கொடுத்து பிரபலமான தம்பதிகளில் ஒருவராக விளங்கினார்கள்.

மேலும் இந்த திருமணம் பல்வேறு வகைகளில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் தனது முதல் கணவரான அணில் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சச்சின் என்ற ஆறு வயது மகனுக்கு தாயாராக இருக்கின்ற நிலையில் சிலர் தனிப்பட்ட காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து இருந்தார்கள்.

இந்நிலையில் சீரியல்களில் பெரிய அளவு கவனத்தை செலுத்தி வந்த மகாலட்சுமி சீரியல் நடிகர் ஈஸ்வரன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார், என ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ புகார் ஒன்றை கொடுத்திருந்த சமயத்தில் இவரது எக்ஸ் கணவர் அணில் இவர்களைப் பற்றி சில விஷயங்களை ஷேர் செய்து இருந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் சிங்கிள் மலராக இருந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக இணையங்களில் புகைப் படங்கள் வெளி வந்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

மெசேஜ பார்த்து காதலில் விழுந்தேன்..

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல நெகட்டிவ்வான கருத்துக்கள் தோன்றிய நிலையில் அதற்கு தக்க பதிலை தயாரிப்பாளர் ரவீந்தர் கொடுத்திருக்கிறார்.


மேலும் நடிகை மகாலட்சுமி தான் விரும்பித்தான் ரவீந்தரனை கை பிடித்ததாகவும் கல்யாணமே வேண்டாம் என்று இருந்த நான் என் மகனுக்காக நல்ல மனிதரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்ததை அடுத்து ரவீந்தர் தனக்கு கிடைத்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை மகாலட்சுமி ரவீந்தரரை எப்படி காதலித்தார் என்ற விஷயத்தை கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் அழ்த்தியிருக்கிறார். அந்த விஷயத்தில் ஆரம்ப நாட்களில் மட்டுமல்ல கடைசி வரை ஐ லவ் யூ என்ற வார்த்தையை ரவீந்தர் எந்த இடத்திலும் சொல்லவில்லை.


ஆனால் அவர் அனுப்பிய மெசேஜை பார்த்து நான் காதலில் விழுந்து விட்டேன். அவர் எப்படி மெசேஜ் அனுப்பி இருந்தார் தெரியுமா? Can you be Mrs.Ravindar Chandrasekaran என்ற மெசேஜ் செய்தார். இதனை பார்த்த பிறகு இவர் மீது காதல் வந்தது என தன் கணவர் குறித்து VJ மகாலட்சுமி.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் காதலுக்கு கண் இல்லை என்பதை உறுதி செய்ய கூடிய வகையில் இவர்களது காதல் கல்யாணத்தில் முடிந்திருக்கிறது என்று நக்கலாக கமெண்ட் செய்து பேசி வருகிறார்கள்.

   

--Advertisement--