இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவரை 14 வயது மாணவன் கர்ப்பமாக்கியுள்ளதாக வெளியான குற்றச்சாட்டை அடுத்து போலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த 17 வயது மாணவிக்கு திடீர் தலைச்சுற்று மற்றும் வாந்தி ஏற்பட்டதால் மாணவியின் தாயார் அருகில் இருக்கும் வைத்தியசாலை ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அம் மாணவி 4 மாத கர்ப்பமாக உள்ளதாக வைத்தியரால் தாயாருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கேள்வியுற்ற தாயார் மகள் பூப்பெய்தியே எட்டு மாதங்கள் தான் ஆனால், நான்கு மாத கர்பமா என அங்கேயே மயங்கி வீழ்ந்ததாகவும் இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள 14 வயது மாணவனே காரணம் என மாணவி தெரிவித்துள்ளார். இச் சம்பவத்தால் இரு வீட்டாருக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டு போலிசார் நிலையம் வரை சென்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தற்போது போலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனே காரணம் என மாணவியும் அவரது பெற்றோரும் கூறிக் கொண்டிருக்கையில் மாணவி அப்பகுதியில் உள்ள கோவில் உதவியாளர் ஒருவருடன் தொடர்பு என மாணவனின் பெற்றோர் போலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவியும் யாழ்ப்பாணத்தில் நகர்ப்பகுதியில் உள்ள பிரபல பள்ளிலை ஒன்றில் படித்து வருகிறார் என தெரியவந்துள்ளது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் ஒருவன் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளான்.
முல்லைத்தீவு போலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் பதிவு செயப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே மேற்படி சிறுவன் கைது செய்யப்பட்டார். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட சிறுவன் எதிர்வரும் 20ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளான். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Tags
Sri lanka