பாதி கதையை மட்டும் கேட்டு விட்டு நடிக்க மறுத்த விஜய் - பிறகு, சூப்பர் ஹிட் ஆனா படம்..!


நடிகர் விஜய்க்கு எப்போதும் ஸ்பெஷல் குணம் இருக்கிறது. எது என்னவென்றால், அப்போதைக்கு என்ன ட்ரென்டோ அதை சுற்றி அமைக்கப்படும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். 

பொத்தாம் பொதுவாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு விஜய்யிடம் சென்றால் முழு கதையை கூட கேட்காமல் அனுப்பி விடுவார். படங்கள் மட்டுமல்ல, பாடல்கள், உடுத்தும் உடை என அனைத்தையும் படம் எடுக்கும் நேரத்தில் ட்ரெண்டாக இருக்கும் விஷயத்தை தான் பின்தொடருவார். 


இப்படி பட்ட இவரிடம், பிரபல இயக்குனர் லிங்குசாமி கடந்த 2004-ம் ஆண்டு சண்டைக்கோழி படத்தின் கதையை எடுத்துக்கொண்டு சென்றுளார். கதையை கேட்டுக்கொண்டிருந்த விஜய் முழுமையாக கேட்காமல் பாதியிலேயே வேற ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க என்று லிங்குசாமியை அனுப்பி விட்டாராம். 


ஆனால், அதே கதையை புதுமுக நடிகராக இருந்த விஷாலை வைத்து எடுத்து சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார் நம்ம லிங்கு. இந்த படம் நடிகர் விஷாலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post
--Advertisement--