இந்தியாவின் 14-வது பிரதமராக பதவிவகிக்கும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, 2014 தேர்தலில் பாஜகவை ஆச்சர்யமளிக்கும் வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றவர்.
மோடியை பற்றிய மற்றொரு ஆச்சர்யமான தகவல் என்னவெனில், அவர் முதல்முறையாக எம்எல்ஏ ஆன போதே குஜராத் முதல்வரானவர். அதேபோலவே முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான போதே பிரதமர் ஆனார்.aஅந்த அளவுக்கு நிர்வாக திறமை கொண்ட ஒரு மனிதர்.
1984-லிருந்து முதல்முறையாக மக்களவையில் பெரும்பான்மை அரசாக 2014ல் பாஜக அரசு அமைத்த பெருமை இவரையே சாரும். வாத்நகரில் உள்ள குஜராத்தி குடும்பத்தில் பிறந்த இவர், தந்தையின் தேநீர் கடையில் உதவி செய்து பின்னர் சொந்தமாக தேநீர் கடை வைத்து எளிமையாக வாழ்வை துவங்கியவர்.
தனது 8 வயதிலேயே RSS எனப்படும் அமைப்புடன் துவங்கிய இவரது பந்தம் இன்னும் தொடர்கிறது. இவர் 1985-ல் பாஜகவில் இணைக்கப்பட்டார்.இவர் மீது இதுவரை ஒரு ஊழல் குற்றசாட்டு கூட கிடையாது. கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர்.
இவர் மீது என்ன புகார் சொல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி கிடக்கும் எதிர்கட்சிகள். இவர் RSS அமைப்பை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தை வைத்து சிருப்பன்மையினருக்கு எதிரானவர் என்ற போலியான பிம்பத்தை உருவாக்க முயன்றனர். அந்த முயற்சிக்கு பலிகடா ஆனவர்கள் தமிழ் மக்கள் மட்டுமே.
இந்தியாவில் வேறு எந்த பகுதியிலும் மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால், தமிழகத்தில் மோடி எதை செய்தாலும் அதனை எதிர்மறையாகவே அணுகுகிறார்கள் தமிழ் மக்கள்.
தமிழ் மக்களை குறை சொல்லி பயனில்லை.இங்கு இருக்கும் ஊடகங்கள் தர்மத்தை மறந்து அந்த ஊடகத்தை நிர்வகிக்கும் உரிமையாளருக்கும், அவர் சார்ந்த கட்சிக்கும் ஆதரவாக மோடி மீது ஒவ்வொரு நொடியும் வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் திணித்து வருகின்றது என்பது அசைக்கவே முடியாத உண்மை.
இந்த செய்தியை படித்துக்கொண்டிருக்கும் இந்தநொடி கூட தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு ஊடகத்தில் மத்திய அரசு குறித்தோ அல்லது மோடி குறித்தோ எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் செய்தி ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால், நான் இந்தியன் என்ற உணர்வையே மழுங்கடித்து விட்டன இன்றைய ஊடகங்களும், போராளி என்ற பெயரில் வளம் வரும் பிரிவினை வாதிகளும். ஆனால், இந்த பாச்சா எல்லாம் வட நாட்டில் செல்லுபடி ஆகாது.
இப்படி இந்தியாவின் இரும்பு மனிதான உருவெடுத்து தன்னை பற்றி வரும் கண்ணியகுறைவான பேச்சுகளை பற்றி கவலை கொள்ளாமல் இந்திய நலன் குறித்து அயாரது உழைத்து வருகிறார் மோடி. இவர் ஒரு நாளில் 21 மணிநேரம் விழித்துக்கொண்டு இருக்கிறார். 3 மணி நேரம் மட்டுமே உறக்கம். அதுவும், தொலை தூர பயண நேரங்களில் மட்டுமே.
இப்போது, உலக அளவில் வலுவான மனிதர்கள் என்ற வாக்கெடுப்பை நடத்த ப்ரிட்டிஷ் ஹெரால்டு என்ற உலக புகழ் பெற்ற பத்திரிக்கை ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் நம் நாட்டின் பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். இது இந்தியர்களுக்கு பெருமையான விஷயம்.
Tags
Modi