காலமானார் நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணி மனைவி! காரணம் கேட்டு ரசிகர்கள் ஷாக்!


தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக விளங்கும் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல்நலக்குறைவு காரணமாக 2025 மே 5 அன்று சென்னையில் காலமானார். 

அவருக்கு வயது 67. இந்த செய்தி திரையுலகையும் ரசிகர்களையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கவுண்டமணியின் தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த சாந்தியின் மறைவு, அவரது குடும்பத்திற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. 

கவுண்டமணி, 1963-ம் ஆண்டு சாந்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர். சாந்தி, கவுண்டமணியின் திரை வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உறுதுணையாக இருந்தவர். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவர்களது இல்லத்தில் சாந்தியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்களால் மரியாதை செலுத்தப்பட்டது. சாந்தியின் மறைவுக்கு உடல்நலக்குறைவு காரணமாகக் கூறப்பட்டாலும், கடந்த சில தினங்களாக மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்ந்து வந்துள்ளார் சாந்தி அவர்கள், இதன் காரணமாகவே அவருடைய உடல் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து, இன்று (மே 5, 2025) காலை 10:30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கவுண்டமணி, தனது நகைச்சுவைத் திறனால் 80-90களில் செந்திலுடன் இணைந்து தமிழ் சினிமாவில் புரட்சி செய்தவர். “வாழைப்பழம்” காமெடி உள்ளிட்ட அவரது காட்சிகள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. 

ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் பொதுவெளியில் இருந்து விலகியே இருந்தது. சாந்தியின் மறைவு குறித்து திரையுலகைச் சேர்ந்த பலரும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்தனர். 

சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கவுண்டமணிக்கு ஆறுதல் கூறி, சாந்தியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர். இந்த இழப்பு, கவுண்டமணியின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--