அபிராமியின் அடங்காத காம இச்சை.. சிறையில் ஓரினச்சேர்க்கை.. வெளியான பகீர் வீடியோ..

காஞ்சிபுரம் முதன்மை நீதிமன்றத்தில் 2018-ல் நடந்த ஒரு பரபரப்பான வழக்கு தொடர்பாக, பிரபல வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ் வேந்தன், மெட்ரோ மெயில் என்ற யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முக்கிய தகவல்களைப் பகிர்ந்தார்.

இந்த வழக்கில், அபிராமி என்ற பெண், தனது கள்ளக் காதல் உறவு காரணமாக தனது இரண்டு குழந்தைகளை (அஜய் - 7 வயது, காருண்யா - 4 வயது) கொலை செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார்.

இந்த வழக்கு, சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏனெனில் இதுபோன்ற ஒரு குற்றம் அப்போது புதிதாக இருந்தது.வழக்கறிஞர் தமிழ் வேந்தன், இந்த வழக்கை மிகவும் தீவிரமாக கையாண்டவர். அபிராமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சார்லஸ் உடன் இணைந்து ஆழமான விசாரணை மேற்கொண்டார்.

அபிராமியின் வீடு மற்றும் அவரது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நேர்காணல் செய்து, முக்கிய ஆதாரங்களை சேகரித்தார். இந்த வழக்கு, காஞ்சிபுரம் முதன்மை நீதிமன்றத்தில் நீதியரசர் செம்மல் தலைமையில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ் வேந்தன் பாராட்டினார், மேலும் அரசு தரப்பு வழக்கறிஞரின் சிறப்பான பணியையும் புகழ்ந்தார். 25 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், இந்த வழக்கு மிகவும் துல்லியமாக கையாளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் பின்னணி 2018-ல் தொடங்கியது. அபிராமி, தனது கணவர் விஜய்யுடன் சென்னை டி.நகர் பகுதியில் வசித்து வந்தார். விஜய், ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பும் மரியாதைக்குரிய வேலையில் இருந்தார். அவர்களது திருமணம் காதல் திருமணமாக இருந்தது.

ஆனால், அபிராமி, மியூசிக்கலி (தற்போதைய டிக்டாக்) ஆப் மூலம் வீடியோக்கள் எடுப்பதில் அடிமையாகி, குடும்ப வாழ்க்கையை புறக்கணித்தார். இதனால், அவர் அருகிலுள்ள பிரியாணி கடை உரிமையாளர் சுந்தரத்துடன் நெருக்கமான உறவு ஏற்படுத்திக் கொண்டார்.

இந்த உறவு, அவரது குடும்பத்தில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கியது.விஜய்யின் அறிவுரையையும் மீறி, அபிராமி தனது கள்ள உறவைத் தொடர்ந்தார். சுந்தரத்துடன் அவர் நெருக்கமாக இருந்தது விஜய்க்கு தெரிந்து, பலமுறை எச்சரித்தும் அபிராமி மாறவில்லை.

இறுதியில், தனது குழந்தைகளை கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். சுந்தரம் வழங்கிய மென்சோவேட் பிளஸ் மாத்திரைகளை (கர்ப்பத்தை தடுக்கும் மருந்து) தவறாக பயன்படுத்தி, குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைகளாக கொடுத்து கொலை செய்தார்.

இந்த செயல் திட்டமிடப்படாத, உணர்ச்சிவசப்பட்ட முடிவாக இருந்ததாக தமிழ் வேந்தன் குறிப்பிட்டார். மருத்துவ பரிசோதனையில், குழந்தைகளின் உடலில் இந்த மாத்திரைகளின் தன்மை கண்டறியப்பட்டது.விசாரணையின்போது, அபிராமியின் வீட்டில் குழந்தைகளின் உடல்கள் மிகவும் பயங்கரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

படுக்கையில் இருந்த பஞ்சு வெளியே தள்ளப்பட்டு, குழந்தைகளின் உடல்கள் அழுத்தப்பட்டு இருந்தன. அபிராமியின் அம்மா, குழந்தைகளின் மரணத்திற்கு பிறகு, அவர்களின் புகைப்படத்துடன் பால், காபி மற்றும் பிஸ்கட் வைத்து அஞ்சலி செய்தார்.

இந்த சம்பவம், அக்கம்பக்கத்தினரையும், வீட்டு உரிமையாளரையும் உணர்ச்சிவசப்படுத்தியது. அவர்கள், "குழந்தைகளை எங்களிடம் கொடுத்திருந்தால், நாங்கள் வளர்த்திருப்போம்" என்று கூறி வருத்தம் தெரிவித்தனர்.நீதிமன்றத்தில், அபிராமியின் நடவடிக்கைகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகின.

அவர் சிறையில் இருந்தபோதும், நகைக் கலை, ஆடை அலங்காரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது நீதிபதியை கோபப்படுத்தியது. அவரது உடைகள் மற்றும் தோற்றம், ஒரு குற்றவாளியின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை என்று கருதப்பட்டது. இறுதியாக, நீதிமன்றம் அபிராமிக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

சுந்தரத்திற்கும் இதே தண்டனை வழங்கப்பட்டது, ஏனெனில் அவர் மாத்திரைகளை வழங்கி, கொலையில் பங்கு வகித்தார்.தமிழ் வேந்தன், இந்த தீர்ப்பை முழுமையாக ஆதரித்தார்.

அவர், மரண தண்டனை என்பது உண்மையான தண்டனையாக கருதப்பட முடியாது என்றும், ஆயுள் தண்டனையே ஒருவருக்கு உண்மையான துன்பத்தை அளிக்கும் என்றும் கூறினார்.

அபிராமியின் காம இச்சை, இந்த பயங்கரமான குற்றத்திற்கு காரணமாக இருந்ததாகவும், இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவரிடம், தன்னுடைய அடங்காத காம இச்சை காரணமாகத்தான் தன் பெற்ற குழந்தைகளை கொலை செய்திருக்கிறார் இந்த அபிராமி. அப்படி இருக்கும்போது பல ஆண்டுகளாக சிறையில் இந்த காம இச்சையை அடக்கி கொண்டு அவரால் இருக்க முடியுமா..? அல்லது சிறைக்குள்ளே ஏதேனும் காம லீலைகள் நடக்க வாய்ப்பு இருக்கிறதா..? என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு வழக்கறிஞர் கொடுத்த பதில் அதிர வைப்பதாக இருந்தது. அவர் கூறிய பதிலாவது, நீங்கள் கேட்கக்கூடிய கேள்வியின் உள்ள அர்த்தம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், சிறைக்குள் ஆண்களுடன் பெண் சிறை கைதிகள் தொடர்பு கொள்வதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் சரி. ஆனால், ஓரினச் சேர்க்கைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கு ஆதாரமாக சமீபத்தில் புழல் சிறையில் பணியாற்றிக் கொண்டிருந்த சிறை காவலர் ஒருவர் சிறைக்குள் நடக்கக்கூடிய கொடுமைகளை எல்லாம் வெளியே பேசி இருந்தார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றியும் பேசி இருந்தார்.

அப்படி இருக்கும் பொழுது சிறைக்குள் ஓரினச்சேர்க்கை என்பது கட்டாயம் நடக்கிறது. அதில் மாற்று கருத்து இல்லை. இப்படி ஓரினச்சேர்க்கை மூலம் தான் அபிராமி தன்னுடைய காம இச்சைகளை தீர்த்துக் கொள்ள முடியும். தவிர அவர் நினைக்கக்கூடிய வகையிலோ அல்லது பொதுவெளியில் பேசக்கூடிய வகையிலோ வேற எதுவும் அவருக்கு நடந்து விடாது.

மரண தண்டனையை விட ஆயுள் தண்டனை கொடுமையானது. மரண தண்டனை நொடியில் நடந்து விடும். மரணம் என்பது எல்லோருக்கும் நடக்கக்கூடியது.

அது எப்படி தண்டனையாக இருக்க முடியும். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மரணம் என்பது ஒரு முறை நடக்கப்போகிறது. அதை முன்கூட்டியே கொடுப்பது என்பது தண்டனை கிடையாது.

எல்லா சந்தோசமும் இருக்க வேண்டும்.. எல்லா வசதியும் இருக்க வேண்டும்.. இந்த உலகத்தில் அவர்கள் இருக்க வேண்டும்.. ஆனால் எதையும் தன்னால் அனுபவிக்க முடியவில்லை என்று எண்ணி எண்ணி அவர்கள் உங்களுடைய வாழ்நாளை நொந்து நொந்து சாக வேண்டும். இதுதான் தண்டனை.

இந்த தீர்ப்பை முழுதாக வரவேற்கிறேன். மக்களும் வரவேற்கிறார்கள் என பேசியிருக்கிறார் வழக்கறிஞர் ஆர் எஸ் தமிழ் வேந்தன்.

Summary in English : In a sensational 2018 case, Abirami was convicted for murdering her two children, Ajay (7) and Karunya (4), to pursue an illicit affair with Sundaram. Lawyer RS Tamil Vendan, who pursued the case diligently, praised the Kanchipuram court's verdict, sentencing both to life imprisonment.