கற்பு முக்கியம்.. ஆனால்.. பூனைக்கண் புவனேஸ்வரி சொல்வதை கேட்டீங்களா..?

தமிழ் திரையுலகில் கவர்ச்சி வேடங்களில் நடித்த சில நடிகைகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புவனேஸ்வரி.

இதையும் படிங்க: புன்னகையரசி சினேகாவின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!


இவரது கண்கள் பார்ப்பதற்கு பூனையின் கண்களை போல் பழுப்பு நிறத்தில் இருப்பதால் இவரை பூனைக்கண் புவனேஸ்வரி என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.

பூனைக்கண் புவனேஸ்வரி..

இவர் தமிழில் பெரும்பாலும் காமெடி அல்லது கவர்ச்சி வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். குறிப்பாக பிரியமானவளே, என்னவோ புடிச்சிருக்கு, ரிஷி, குண்டக்க மண்டக்க போன்ற படங்களில் இவரது அற்புத நடிப்பு வெளிப்பட்டிருக்கும்.

அது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் விலை மாதுவாக நடித்திருக்க கூடிய இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் விலை மாதுவாக நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார்.


இதனை அடுத்து தமிழில் அதிக அளவு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்று அங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் கடைசியாக தலைநகரம் திரைப்படத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் இவர் மீது காவல் துறையினர் விபச்சார வழக்கு பதிவு செய்ததை அடுத்து தான் தமிழில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

அது மட்டுமல்லாமல் அவர் மீது போடப்பட்ட வழக்கு ஒரு திட்டமிட்ட போலியான வழக்கு எனவும் தன் மீது தொடரப்பட்ட வழக்கு தவறானது என்று நீதிமன்றத்தில் வாதாடிய பிறகு வெளியே வந்ததாக கூறியிருக்கிறார்.


கற்பு முக்கியம் ..

இந்த வழக்குக்கு பிறகு இவரைப் பற்றி அதிக அளவு செய்திகளை எந்த ஒரு ஊடகங்களிலும் பார்த்திருக்கவோ அல்லது படித்திருக்கவோ முடியாது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு சீரியல்களில் வில்லியாக நடிக்க ஆரம்பித்தார்.

அதிலும் குறிப்பாக சித்தி சீரியலில் நடிக்க ஆரம்பித்த பூனைக்கண் புவனேஸ்வரி ராஜராஜேஸ்வரி, சொர்க்கம், தெற்கத்தி பொண்ணு, சந்திரலேகா, பாசமலர், ஒரு கை ஓசை போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்து கலக்கி இருக்கிறார்.


மேலும் அண்மையில் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றில் பேசிய பூனைக்கண் புவனேஸ்வரி கற்பு பற்றி பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

கற்பு குறித்த பேச்சு..

அவர் அந்த பேச்சில் கற்பு என்பது புனிதமானது. தற்போது இருக்கும் தலைமுறை பெண்களுக்கு அது புரியவில்லை. என்னை பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு என் பெயரை கெடுத்து விட்டார்கள். இதனால் எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது.

எனவே தான் நான் தமிழ் படங்களில் அதிக அளவு நடிப்பதில்லை. தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறேன். எனக்கு சரோஜாதேவியை மிகவும் பிடிக்கும். ஆனால் அவருக்கு திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வேடங்களை போல் எனக்கு எந்த ஒரு வேடமும் கிடைக்கவில்லை.

பல கஷ்டங்களை தாண்டி தான் நான் இன்று இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு என் அம்மா தான் காரணம். அது மட்டுமல்லாமல் நான் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு அனாதை குழந்தைகள் வயதானவர்கள் என பலருக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.


மேலும் என் சமையல் அனைவருக்கும் பிடிக்கும் சினிமாவில் திறமை இருந்தால் மட்டும் தான் நிலைத்து நிற்க முடியும்.எனவே யாரையும் நம்பி திரைத்துறைக்கு வரக்கூடாது என பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: பல கோடி ருபாய் கடனில் தனுஷ்.. ரஜினி செய்த பெரிய துரோகம்.. உண்மைக்கு முரணான சான்றிதழ்கள்..

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு பூனைக்கண் புவனேஸ்வரி மீது சுமத்தப்பட்ட புகார்களால் எந்த அளவிற்கு மன வேதனை அடைந்து கஷ்டப்பட்டார் என்ற விஷயத்தை புரிந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்லி வருகிறார்கள்.