ஹீரோயினை விட துணை நடிகை அழகா இருந்தா.. அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட நடிகை..!

குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் பல்வேறு இன்னல்களுக்கும் சிரமத்திற்கும் ஆளாகிறார்கள்.

குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துகிறார்கள். இவர்கள் அழகாக இருந்துவிட்டால் ஹீரோயினை விட அழகு குறைத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக,

குணசித்திர நடிகைகளுக்கு இவ்வளவு பிரச்சனையா?

அசிங்கமாக மேக்கப் செய்து ஹீரோயினை விட குறைந்த அழகில் காட்டுகிறார்கள். அது மட்டும் இல்லாமல்,

சிறப்பாக நடித்து விடக்கூடாது ஹீரோயினை விட அதிகமாக பெர்பார்மென்ஸ் செய்யக்கூடாது.

--Advertisement--

இதுபோன்று எல்லாம் குண சித்திர நடிகைகள் தங்களது பிரச்சனைகளை எதிர்கொள்வதுண்டு. சமீபத்திய பேட்டி ஒன்றின் பிரபல நடிகையான லாவண்யா இதுபற்றி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் ஹீரோயினுக்கு தங்கை ரோல்களிலும் நடித்துள்ளார் .

எண்ணற்ற திரைப்படங்களில் இவர் தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு திரைப்பட குறைய தொடங்கியதால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

நடிகை லாவண்யா:

தற்போது அறிவு என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவரின் வெற்றி படங்களாக சூரிய வம்சம்,

படையப்பா, ஜோடி, தெனாலி உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்த வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குணச்சித்திர நடிகையாக திரைப்படங்களில் நடிக்க போது தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகர் லாவண்யா.

நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக படையப்பா படத்தை என்னால் மறக்கவே முடியாது.

ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் போது கதாநாயகிகளை விட அழகாக தெரிந்ததால் என்னுடைய முகத்தில் மேக்கப் போட்டு அசிங்கமாக முகத்தை காட்டி பின்னர் நடிக்க வைப்பார்கள்.

திரையில் அசிங்கமா காட்டுவாங்க:

இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் நான் ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது. நடிப்புதான் நமக்கு முக்கியம். அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்பில் மற்றும் கவனத்தை செலுத்தினால்,

நாம் பேசப்படலாம் என்பது என் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அதனால் அதைப் பற்றி எல்லாம் நான் எப்போதும் கவலைப்பட்டதே கிடையாது என்றார்.

அதுமட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களில் எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்து நானும் நடிப்பேன்.

ஆனால் அந்த திரைப்படங்கள் வெளிவராமல் போய்விட்டது. இதனால் எனக்கு மிகப்பெரிய அடையாளமோ அங்கீகாரமோ திரைப்படத்தின் மூலமாக கிடைக்கவில்லை.

நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் என்று தான் பேரு. ஆனால் பெரிய அளவில் பிரபலப்படுத்தவில்லை என மிகுந்த வேதனையோடு கூறி இருக்கிறார்

நடிகை லாவண்யா திரைப்படங்களில் நடிகையாக அறிமுகம் ஆவதற்கு முன்னரே தொகுப்பாளினியாக தனது பணியை செய்து வந்தார்.

கடைசிவரை அடையாளம் கிடைக்கல:

பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு மிகப்பெரிய அளவில் அடையாளம் கிடைக்காததால் மார்க்கெட் இழந்தார்.

பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட கிடைத்த வாய்ப்புகளில் நடிக்க வேண்டும் என்பதால்,

சன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வந்த அருவி சீரியலில் மூத்த அண்ணனுக்கு மனைவியாக நடித்து இல்லதரசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.