கொலை மிரட்டல் விடுத்த சரண்யா பொன்வண்ணன்… பரபரப்பு தகவல்கள்..!

தென்னிந்திய திரை உலகில் மிகச்சிறந்த நடிகையாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணன் 1980 களில் நடித்து வந்தவர். அந்த வகையில் இவர் மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.


இதனை அடுத்து பல படங்களில் நடித்த இவர் குணச்சித்திர வேடங்களிலும், அம்மா வேடங்களிலும் நடித்து அசத்தியவர். குறிப்பாக ஆடி போய் ஆவணி வந்தா என் பையன் டாப்ல வருவான் என்ற வசனத்தை பேசி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

சரண்யா பொன்வண்ணன்..

சரண்யா பொன்வண்ணனை பொறுத்த வரை ஒரு சிறிய ஒரு மிகப்பெரிய இடைவெளியை திரையுலகில் எடுத்துக்கொண்ட இவர் எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க துவங்கினார்.

அந்த வகையில் 2005 ஆம் ஆண்டு ராம் படத்திலும் அதே ஆண்டு தவமாய் தவமிருந்து படத்திலும் நடித்த இவர் 2006 ஆம் ஆண்டு எம்டன் மகனின் நடித்து அசத்தினார்.

இதையும் படிங்க: 40 வயசை தாண்டியும் திரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் இது தானாம்..


கடந்த 2010 ஆம் ஆண்டு களவாணி படத்தில் நடித்த இவருக்கு சிறந்த குணசித்திர நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதுகள் இரு முறை கிடைத்துள்ளது. இதனை அடுத்து இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதினை தென் மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் நடித்ததற்காக பெற்றிருக்கிறார்.

கொலை மிரட்டல்..

இவர் அசாத்திய நடிப்பை கருத்தம்மா, அஞ்சலி, பசும்பொன் போன்ற படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு தனது நடிப்பை காட்டியவர்.

இவரைப் பற்றி அண்மையில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் நடிகை சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விட்டதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பான விஷயம் தான் தற்பொழுது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.


பரபரப்பு தகவல்கள்..

மேலும் சரண்யா பொன்வண்ணன் மீது எதற்காக கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது தெரியுமா? இவரின் கார் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டுக்காரரோடு சண்டை போட்டு இருப்பதை அடுத்து நடந்த தகராறில் சரண்யா பொன்வண்ணன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அண்டை வீட்டுக்காரி ஸ்ரீதேவி என்பவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை அங்கு இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளி வந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


இதையும் படிங்க: 16 வருஷ உழைப்பு என்ன ஆச்சு..? உக்கார முடியல..! மிரட்டி எடுக்கும் மலையாள சினிமா.. ஆடு ஜீவிதம் ..!

அது மட்டுமல்லாமல் திரைப்படங்களில் அறிவுரை சொல்லக் கூடிய அம்மா வேடத்தில் நடித்து வரக்கூடிய இவர் வில்லியாக மாறி இப்படி பக்கத்து வீட்டுக்காரரோடு சாமானிய பெண்ணாய் சண்டை போட்டு இருப்பதை பற்றி ரசிகர்கள் விதவிதமாக பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு விவரம் தெரியாத நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்லி சரண்யா பொன்வண்ணனை நக்கலாக கிண்டல் செய்திருப்பதோடு இதெல்லாம் தேவையா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.