ரோபோ சங்கர் மனைவிக்கு உதட்டு முத்தம் கொடுத்த மருமகன்..! இந்திரஜா கூறிய விளக்கம்.. கடைசியா கேட்ட கேள்வி..

அண்மையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கும் ரோபோ சங்கரின் மனைவி தூக்கி வளர்த்த வளர்ப்பு தம்பி யான கார்த்திக் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் காதல் திருமணம் என்பதால் சில மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்த முடிந்தது. அதன் பின்னர் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.

ரோபோ ஷங்கர் மகள் திருமணம்:

இந்த திருமணத்தில் மருமகன் கார்த்திக் மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகிய தீயாய் பரவி கடுமையாக அவர்களை விமர்சித்த வந்தனர்.

அது மட்டுமில்லாமல் இது கலாச்சார சீர்கேடு என பலர் அவரை குறை சொல்லி திட்டி தீர்த்து வந்தார்கள்.

--Advertisement--

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து குடும்பமாக சேர்ந்து விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆம், இது குறித்து மருமகன் கார்த்தி விளக்கம் கொடுத்திருப்பதாவது நாங்கள் பிளான் பண்ணி இப்படி போட்டோ எடுக்கணும் அப்படின்னு நினைக்கவே இல்ல.

மாமியாருக்கு உதட்டில் முத்தம்:

என் அக்கா கூட நான் கல்யாண ரிசப்ஷன்ல டான்ஸ் ஆடிட்டே இருந்தேன். அப்ப அக்காவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்க போறப்போ அவங்க எதிர்பாராத விதமா திரும்பிட்டாங்க.

அதனால அவங்களோட உதட்டில் முத்தம் கொடுக்க அதை போட்டோ எடுத்து வெளியிட்டாங்க இதை சில ரொம்ப கேவலமா சித்தரிச்சு பேசிட்டு வராங்க.

அது மட்டும் இல்லாம ஆபாசமா அதை பலர் விமர்சித்து வருகிறார்கள். இது சுத்தமா எங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை. மிகுந்த மன உளைச்சல் கொடுத்திருக்கு.

அதாவது நான் உதட்டில் முத்தம் கொடுத்து இருந்தா கூட என்னோட அக்கா அது தப்பா நினைச்சு இருக்க மாட்டாங்க.

என்கிட்டயும் அதுபோன்ற எண்ணமும் கிடையாது. அதனால எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல. ஆனால் பாக்குறவங்களோட பார்வை ரொம்பவும் மோசமா இருக்கு.

சர்ச்சைக்குள்ளான கல்யாணம்:

இவங்க என்ன கைக்குழந்தையிலிருந்து சின்ன தம்பியா தூக்கி வளர்த்திருந்தாங்க. அதனால இது எதிர்பாராத விதமா நடந்தது தான் அதனால எங்களுக்குள்ள எந்த ஒரு தீய எண்ணமும் எங்க மனசுல இல்லவே இல்ல.

நிஜத்துல அதை பார்த்தவங்க அந்த வீடியோவுல என்ன இருக்கு அப்படின்னு கண்டிப்பா புரிந்துக்கொண்டு அந்த போட்டோவை பார்த்து திட்ட மாட்டாங்க புரிஞ்சுபாங்க.

என்று இந்திரஜாவும் இது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த விளக்கம் கொடுத்த வீடியோவையும் சில பேர் “மாமியாருக்கு உதட்டுல முத்தம் கொடுத்த மானங்கெட்டவன் தானே நீ”?

என பல மோசமாக விமர்சித்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த போட்டோவை எடுத்து யூடியூப்களில் வெளியிட்டு அதன் மூலம் பணத்தை சம்பாதிக்கிறார்கள்.

நாங்க அடிமட்டத்திலிருந்து படிப்படியா வளர்ந்து வந்து இன்று ஒரு நல்ல ஒரு நிலைமையில் இருக்கிற குடும்பம்.

மருமகன் வேதனையுடன் விளக்கம்:

அதனால எங்களோடு திருமணத்த ரொம்ப சந்தோஷமா கொண்டாடணும் அப்படின்னு முடிவு பண்ணி எங்களோட திருமணத்தை பார்த்து பார்த்து எங்களுக்கு பிடிச்ச மாதிரி நடத்தினோம்.

ஆனால் அதை பிடிக்காத சிலர் இப்படி வைத்தெரிச்சல்ல ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டு அதை பத்தி பெருசா பேதி பூதாகரமா கிளப்புறாங்க.

ஒருவேளை ஆரம்ப கட்டத்தில் இருந்து எங்கள மாதிரி அவங்களும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்த குடும்பமா இருந்திருந்தால்,

இப்படி எல்லாம் தப்பா பேசுவார்களா? என்று இந்திரஜா ரொம்ப எமோஷ்னலா கடைசியா ஒரு கேள்வி கேட்டார்.

இந்த நேர்காணல் தற்போது இணைவாசிகள் இடையே வைரலாகி வருகிறது. பலர் அவரது குடும்பத்திற்கு அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள் என ஆறுதல் கூறி வருகிறார்கள்.