அழைத்த அனிருத்.. மறுத்த காதலி.. ஹோட்டல் அறையில் கதறிய பின்னணி பாடகி..! – என்ன நடந்தது..?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் நடிகை ஆண்ட்ரியா இருவரும் காதலித்ததும்.. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து போனதும்… ஊரறிந்த விஷயம். இதை இருவருமே வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.

இதில் கிசுகிசுவோ, வதந்தியோ, ஒன்றும் கிடையாது. உச்சகட்டமாக மியூசிக் ஸ்டுடியோவில் மியூசிக் போடுவதை விட்டுவிட்டு.. இருவரும் பசை போட்டு ஓட்டினார் போல ஒட்டிக்கொண்டு பார்த்த வேலைகள் எல்லாம் பொதுவெளியில் உள்ளது.

மியூசிக் ஸ்டூடியோவில் ஆண்ட்ரியாவின் வாயில் மவுத் ஆர்கன் வாசித்துக்கொண்டிருந்த அனிருத்தின் கூத்துக்கள், புகைப்பட வடிவிலும் வீடியோ வடிவிலும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு கிளம்பியது.

இப்படியான புகைப்படங்களை இணைய பக்கங்களில் வெளியிட்டது பாடகி சுசித்ரா. இந்நிலையில், தன்னுடைய முன்னாள் காதலியான ஆண்ட்ரியாவை தன்னுடைய புதிய படம் ஒன்றில் பாடுவதற்காக அழைத்திருக்கிறார் அனிருத்.

ஒரு காலத்தில் அனிருத்தை உருக உருக காதலித்துக் கொண்டிருந்த ஆண்ட்ரியா அவரை விட்டு பிரிந்ததற்கான முக்கிய காரணம் அனிருத் ஒரு வண்டு போன்றவர் என்பதால் தான். வண்டு என்ன செய்யும், ஒரு மலரில்ல் இருக்கக்கூடிய தேனை சுவைத்துவிட்டு.. அடுத்த மலருக்கு தாவிவிடும்.

அந்த வண்டு போன்ற ஒரு ஆள் தான் அனிருத் என்பது ஆண்ட்ரியாவுக்கு தெரிய வரவே.. நீ சுவைத்துவிட்டு பறந்து செல்ல நான் ஆள் இல்லை என்று அனிருத்தை கழட்டி விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

ஆனால், இருவருக்கும் வயது வித்தியாசம் அதனால் தான் பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் கூட பேசப்படுகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி இருக்கையில் மீண்டும் ஆண்ட்ரியாவை அழைத்து தன்னுடைய படத்தில் ஒரு பாடல் பாட ஸ்டுடியோக்கு வாருங்கள் என்று அழைத்து இருக்கிறார் அனிருத்.

ஸ்டூடியோவில் வைத்து நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும். பாடல் எல்லாம் பாட முடியாது. உன்னுடைய சாவகாசமே வேண்டாம்…  ஒரே ஒரு பாடலாக இருந்தாலும் சரி.. பல பாடலாக இருந்தாலும் சரி.. நீ இசையமைக்க கூடிய படங்களில் நான் பாட மாட்டேன் என்று பொட்டில் அடித்தார் போல கூறிவிட்டு அழைப்பை துண்டித்திருக்கிறார் ஆண்ட்ரியா.

இது ஒரு பக்கம் இருவருடைய காதல் விவகாரத்தை.. ஸ்டூடியோவில் செய்த லீலைகளை பொதுவெளிக்கு கொண்டு வந்த நடிகையும் பாடகி சுசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு சில நாட்கள் ஹோட்டல் அறையில் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அப்போது திடரென, நள்ளிரவு நேரத்தில் திடீரென கத்தி கூச்சல் போட்டு இருக்கிறார். சுசித்ரா எப்படிப்பட்டவர் என்று தெரிந்தே தான் ஹோட்டலில் தங்க அனுமதி கொடுத்திருக்கிறது ஹோட்டல் நிர்வாகம்.

எந்த நேரத்திலும் இவர் இப்படியான வேலைகளை செய்யக்கூடும் என்ற பயத்தில் தான் இருந்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல சுசித்ரா நள்ளிரவு நேரத்தில் அலறியுள்ளார்.

இவருடைய கணவர் இவருக்கு மனநோய் இருக்கிறது மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் தேவையில்லாத விஷயங்களை இழுத்து போட்டு கொண்டு செய்கிறார் என்றெல்லாம் கூறி வந்தால் ஒரு கட்டத்தில் விவாகரத்தும் செய்து விட்டார்.

இந்நிலையில், நட்ட நடு ராத்திரியில்.. கத்தி கூச்சல் போட்ட பாடகி சுசித்ராவை பார்த்த ஓட்டல் நிர்வாகத்தினர் பிக்பாஸ் குழுவை அழைத்துள்ளனர்.

மறுபடியும் மனநலம் பாதித்துவிட்டது போல இருக்கிறது என பதறிய பிக்பாஸ் குழு அவரை ஆசிவாசப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் என கூறியுள்ளார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.