” வெள்ளிக்கிழமை கனகதாரா ஸ்தோத்திரம் படியுங்கள்…!” – ஐஸ்வர்யத்தை அள்ளுங்கள்..!!

சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையன்று நீங்கள் கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பதின் மூலம் எண்ணற்ற ஐஸ்வர்யங்கள் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும்.

செல்வம் கூரையை பிரித்துக் கொண்டு கொட்டும் என்று சொல்வார்களே அது உண்மையில் எந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை படித்ததின் மூலம் எத்தகைய வறுமையில் இருப்பவர்களுக்கும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கூடி வரும் என்று கூறுகிறார்கள்.

ஆதிசங்கரர் அருளிய எந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை படிப்பதின் மூலம் வறுமை நீங்கி செல்வம் பெருகும். இந்த சோஸ்திரமானது தான் பிச்சை எடுக்க சென்றபோது வறுமையில் இருக்கும் பெண் தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறாமல் ஒரு நெல்லிக்கனியை சங்கருக்கு கொடுத்தாள்.

அவளின் தயாள குணத்தை எண்ணி ஆதிசங்கரர் மகாலட்சுமியை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தை பாட மகாலட்சுமியும் ஆதிசங்கரின் சங்கரர் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்டதற்கு தனக்கு நெல்லிக்கனியை பிச்சையாக கொடுத்த ஏழை பெண்ணின் வறுமையை நீக்க வேண்டிக்கொண்டார்.

 இதனை அடுத்து அந்தப் பெண்மணி வறுமை நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தின் மூலம் அடைந்ததாக கூறியிருக்கிறார்கள்.

--Advertisement--

 இதனை அடுத்து ஆதிசங்கரனின் விருப்பத்துக்கு ஏற்ப மகாலட்சுமி அந்த ஏழை பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை வாரி இறைத்தாள்.

 எனவே வறுமை உள்ளவர்கள் கையில் காசு இல்லை என்ற கவலைப்படுபவர்கள் கட்டாயம் வெள்ளிக்கிழமை தோறும் ஆதிசங்கரர் கூறிய கனகதாரா ஸ்தோத்திரத்தை கூறி மகாலட்சுமியை வழிபட்டால் எத்தகைய வறுமை இருந்தாலும் அதிலிருந்து நீங்கள் விடுபடலாம்.

 உங்களால் தொடர்ந்து கனகதாரா ஸ்தோத்திரத்தை படிக்க முடியவில்லை என்றாலும் உங்கள் ஒலிபெருக்கிகளின் மூலம் அதை ஒலிக்க விட்டு அதை உங்கள் காதார கேட்டு மனதார வேண்டினாலே உங்கள் காரியம் ஈடேறி அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

 எனவே இனிமேல் மறவாமல் வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் விளக்கு ஏற்றி கனகதாரா ஸ்தோத்திரத்தை படியுங்கள். சகல சௌபாக்கியத்தையும் பெறுங்கள்.