நடிகை சாவித்திரியுடன் இருந்த உறவால்.. நடுத்தெருவுக்கு வந்து இறந்து போன சந்திரபாபுவின் சோக கண்ணீர் கதை..!

நடிகை சாவித்திரியுடன் இருந்த உறவால்.. நடுத்தெருவுக்கு வந்து இறந்து போன சந்திரபாபுவின் சோக கண்ணீர் கதை..!

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர் நடிகர் சந்திரபாபு.

தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த சந்திரபாபு ஜோசப் என்ற பெயர் கொண்டிருந்தார். இதுவரை எல்லோரும் பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர்.

சந்திரகுல வம்சத்தில் பிறந்த காரணத்தால் தனது பெயரைப் பின்னாளில் “சந்திரபாபு” என மாற்றிக் கொண்டார்.

நடிகர் சந்திரபாபு:

அந்த பெயர் அவருக்கு ஒரு ராசியான பெயராக அமைந்துவிட்டது. சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு அந்த காலத்திலே மிகவும் நேர்த்தியான உடையணிந்து அனைஅவர்து கவனத்தையும் ஈர்த்தார்.

--Advertisement--

இதையும் படியுங்கள், நயன்தாராவுடன் அந்த தொடர்பு.. காரணமே இந்த நடிகர் தான்.. குண்டை தூக்கி போட்ட விக்னேஷ் சிவன்..!

அவரது டீசண்டான தோற்றமும் , பேச்சும் சினிமாவில் நுழைய கூறி பலர் சொன்னதால் தனது 16-ஆம் வயதில் சென்னைக்கு வந்து திரையுலகில் நுழைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

ஒரு கட்டத்திற்கு மேல் படவாய்ப்பே கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சித்தார். அதன் பிறகு 1947-ஆம் ஆண்டு “தன அமராவதி” என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

தன் நடிப்பு திறமையால் அறிமுகமான ஒரு சில அவருடத்திலே சந்திரபாபு முன்னணி நகைச்சுவை நடிகரானார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

திரைப்படங்களில் மிகசிறந்த காமெடி காட்சிகளில் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை.

மனைவியின் தகாத உறவு:

அவர் திருமணம் செய்துக்கொண்ட சீலா என்ற பெண் தான் வேறொருவரை விரும்புவதாகக் கூறியதால், அந்தப் பெண்ணின் விருப்பப்படியே அவர் விரும்பும் நபருடன் மகிழ்ச்சியாக வாழ, மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு.

அந்த உண்மை சம்பவத்தை மைய்ய கருத்தாக கொண்டு பின்னாளில் “அந்த 7 நாட்கள்” என்ற படத்தை எடுத்ததாக நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள், “மகள் முறையாகும் பெண்ணை நான்..” சர்ச்சையை கிளப்பிய வேல ராமமூர்த்தி..! விளாசும் ரசிகர்கள்..!

நடிகை சாவித்திரி ஒரு முறை இந்தோனேசியாவுக்கு போயிருந்தபோது நாட்டு அதிபர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டார்.

சாவித்ரியுடன் அந்தரங்க உறவு:

அதிபரின் வற்புறுத்தலால் விருந்தில் மது அருந்திய சாவித்திரி பிறகு மதுவுக்கு அடிமையாகி விட்டார். மாலை நேரங்களில் சாவித்திரிக்கு மது அருந்த கம்பெனி கொடுத்தவர் நடிகர் சந்திரபாபு நாயுடு தான்.

அது மட்டுமில்லாமல் மது அருந்திவிட்டு இருவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது சாவித்திரியால் சந்திரபாபு கெட்டான் சந்திரபாபுவால் சாவித்திரி கெட்டால் செய்திகள் வெளியாகியது.

இவர்களின் அந்தரங்க உறவு அம்பலமானாதால் திரைத்துறை வாழ்க்கை மட்டுமின்றி இருவரின் சொந்த வாழ்க்கையும் சீரழிந்து போனது என்பது நிதர்சனமான உண்மை.