மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி ! சோகத்தில் ஊர் மக்கள்

3 யானைகள் பலி: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாயத் தோட்டத்தில் வைத்த மின்வெளியில் மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக இறந்த சோகம் தற்பொழுது அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காலி கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாயத் தோட்டத்தில் சுற்றி திரிந்த ஐந்து காட்டு யானைகளில் மூன்று காட்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்த சோகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக பாலக்கோடு ஒகேனக்கல் சுற்றுவட்டார வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் விவசாயத் தோட்டத்தில் அவ்வப்போது நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி உணவாக உட்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வனத்துறையினர் காட்டுக்குள் அதை விரட்டி அடிப்பதும் திரும்பவும் அந்த யானைகள் ஊருக்கும் நுழைவதுமாக தொடர்ந்து இந்த பிரச்சனை நிலவி வருகிறது.

இந்த  நிலையில் தான் விவசாயி ஒருவர் கீரிப்பிள்ளை பிடிப்பதற்காக விவசாய தோட்டத்தில் மின்சார கூண்டு ஒன்று அமைத்திருந்ததாகவும், காலை நேரத்தில் சுற்றித்திரிந்து ஐந்து யானைகளில் மூன்று யானைகள் மட்டும் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்சார கூண்டை மிதிக்கும் போது மூன்று காட்டு யானைகளுக்கு மின் சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

ஊருக்குள் யானைகளின் நுழைவது காட்டுக்குள் விரட்டி அடிப்பது இந்த நிலையில் யானைகளுக்கு வனத்துறை எப்படி பட்ட பாதுகாப்பு அளித்துள்ளனர் காடுகளில் வாழும் யானைகளுக்கு தேவையான உணவுகள் உணவுகள் வைக்கப்பட்டுள்ளனவா எனவும் கேள்வி எழுந்துள்ளன.

இந்த நிலையில் தான் சட்டவிரோதமாக மின்சார குண்டு அமைக்கப்பட்டதாக தெரிவித்து பாறை கொட்டை பகுதி சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவரை வனத்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர் முதற்கட்டமாக இந்து மூன்று காற்று அணைகளையும் பெய்த பரிசோதனைக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

--Advertisement--

இந்த மூன்று காட்டு யானைகள்  உயிரிழந்த சம்பவத்தை அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது பெரும் சோகத்தையும் அந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது இதை அதிகாரிகள் கண்டு அதை சரி செய்ய வேண்டும் என பல மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்