சினிமா ஹீரோயின் ஆகனுமா.. புறா சீரியல் நடிகையை வேட்டையாடிய காடு நடிகர்..

சினிமா ஹீரோயின் ஆகனுமா.. புறா சீரியல் நடிகையை வேட்டையாடிய காடு நடிகர்..

கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன், அவ்வப்போது நாளிதழ்களில் செய்தியாக வரும்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு…

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு ஓடிவந்த இளம்பெண்கள், சென்னைக்கு ரயில் ஏறிவந்த இளம் ஆண்கள் மீட்பு, பத்திரமான சொந்த ஊர்களுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர், என்ற செய்திகள் இடம்பெறும்.

ஏனெனில் அப்போதே சினிமாவின் கவர்ச்சி, பல தரப்பினரையும் திக்குமுக்காட வைத்திருந்தது.

சென்னைக்கு போனால் சிவாஜி போல், ரஜினி போல், கமல் போல் நடிகர் ஆகி விடலாம் என்று ஆசைப்பட்டவர்கள் பலர் உண்டு.

ஆனால் அப்படி என்றால், காலம் காலமாக சென்னையில் வாழ்கிறவர்கள் அனைவருமே எளிதில் நடிகர், நடிகையர் ஆயிருக்கலாமே என்று யோசித்திருந்தால், இந்த ரயில் ஏறும் சம்பவங்கள் அப்போது நடந்திருக்காது.

--Advertisement--

சிபாரிசு இருந்தால்…

ஆனால் இப்போதும் சினிமாவில் இருக்கும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் சிபாரிசு இருந்தால் எளிதில் கேமராவின் முன் நின்று விடலாம். திரை வெளிச்சத்தில் நம் முகமும் தெரிந்துவிடும் என ஆசைப்படுகின்றனர்.

சினிமாவில் நடிக்க பணம் இருப்பவர்கள், லட்சக்கணக்கில் தர தயாராக இருக்கின்றனர். அதே வேளையில் ஒரு தரப்பு பெண்கள், எல்லாவிதமான அட்ஜஸ்ட்மெண்டுகளுக்கும் தயாராகி விடுகின்றனர்.

ஏற்கனவே சினிமாவில் இருப்பவர்களில், திரைமறைவில் இந்த அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஒத்துக்கொள்ளவே செய்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

சில நடிகர்களுக்கு சில நடிகைகள் பேவரைட்டாக இருக்க காரணம், அவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விடுவதுதான்.

அண்டர்ஸ்டாண்டிங்தான் காரணம்

சில நடிகைகள், சில இயக்குநர்கள் படங்களில் தொடர்ந்து நடிப்பார்கள். சில நடிகர்கள், சில நடிகைகளுடன் மட்டும் தொடர்ந்து நடிப்பார்கள். இதற்கு அண்டர்ஸ்டாண்டிங்தான் காரணம்.

அந்த வகையில் திரை நடிகர் ஒருவரை, சீரியல் நடிகை ஒருவர் நம்பி ஏமாந்து இருக்கிறார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வைப்பதாக கூறி, சீரியல் நடிகையை பதம் பார்த்துவிட்டு ஏமாற்றி இருக்கிறார் ஹீரோ.

சீரியல் நடிகை

சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருந்த புறா சீரியல் நடிகையை காடு நடிகர் சினிமா ஆசை காட்டி வேட்டையாடி இருக்கிறார்.

சினிமாவில் ஹீரோயினாக்குவதாக கூறி புறா சீரியல் நடிகையுடன் நெருக்கமாக பழகி வந்த காடு நடிகர், அவருடன் காதலில் விழுந்திருக்கிறார் புறா நடிகையும் நடிகருடன் காதல் இருந்திருக்கிறார்.

திருமணம்

திருமணம் செய்து கொள்வார் அல்லது சினிமாவில் ஹீரோயின் ஆக்கி விடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த நடிகைக்கு அவர் எதிர்பார்த்த இரண்டில் ஒன்றுகூட நடக்கவில்லை.

ஆபத்து

காடு நடிகர் பிரபலம் என்றால் கூட அவருடைய பேச்சுக்கு இயக்குனர்கள் செவிமடுவதில்லை என்பதை நாட்கள் செல்ல செல்ல தெரிந்து கொண்ட புறா நடிகை இனிமேல் காடு நடிகரிடம் இருப்பது நல்லது அல்ல ஆபத்து என நினைத்து பிரிந்து சென்று விட்டார்.

தற்பொழுது வேறு ஏதாவது படத்தில் ஹீரோயினாகி விட முடியுமா என்று தவித்துக் கொண்டிருக்கிறார் புறா நடிகை. சினிமா ஹீரோயின் ஆகும் ஆசையில் வந்த புறா சீரியல் நடிகையை ஆசை தீர வேட்டையாடிய காடு நடிகர் கடைசியில் கழட்டி விட்டதுதான் நடிகைக்கு மிச்சம்.