“மார்பகத்தை நீக்க வேண்டும் என கூறிய போது.. காருக்குள் அமர்ந்து கொண்டு..” கனிகா கூறிய பகீர் தகவல்..!

2002 ஆம் ஆண்டு வெளி வந்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் நடிகை கனிகா.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்நிலையில் அண்மையில் இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் இவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இவரது பேச்சைக் கேட்க ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் இவரது அம்மா ஒரு நாள் இவருக்கு போன் செய்து மார்பகத்தில் வலி இருப்பதாக கூறியிருக்கிறார். உடனே இவர் அம்மா வீட்டிற்கு புறப்பட்டு சென்று அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

--Advertisement--

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அம்மாவிற்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக தெரிய வந்தது. இந்த செய்தி அவரை கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கியதாம்.

எனினும் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அம்மா பட்ட வேதனைகளை பார்த்து நொந்து அதற்கு உரிய சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவரிடம் ஆலோசனை கேட்கும் போது அவர் மார்பகத்தை நீக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து அம்மாவின் மார்பகத்தை பாதுகாப்பாக நீக்கினார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது தனக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது என்று கூறியிருக்கிறார். அம்மாவின் மார்பகத்தை நீக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியதும் என்னுடைய காரில் அவர்ந்து கொண்டு நான் கதறி அழுதேன். அது போல ஒரு அழுகையை நான் என் வாழ்க்கையில் அழுதது கிடையாது என கூறியுள்ளார் கனிகா.