“கோவாவில் தனி வில்லாவில் கிரண்..” விஷயம் அறிந்து துடியாய் துடிக்கும் இளசுகள்..!

ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழக இளைஞர்களை “ஓ” போட வைத்த நடிகை தான் கிரண். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை இவர் வில்லன், அன்பே சிவம், அரசு, வெற்றி, திவான், தென்னவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயினியாக படங்களில் நடிக்கும் போதே குத்துப் பாடல்களுக்கு நடனமாடும் நடிகையாக மாறிவிட்டார்.

இந்நிலையில் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் நடிப்புக்கு பை, பை சொல்லிவிட்டு தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு வாரத்திலேயே இவர் வெளியேற்றப்பட்டு விட்டார்.

எனவே மனம் நொந்து போன இவர் மார்க்கெட் குறைந்ததை அடுத்து கவர்ச்சி நடிகையாக மாறினார். அதுவும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாத நிலையில் சமூக வலைதளங்களில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விடுவார்.

இதற்கிடையில் கோவாவில் உல்லாச பங்களா ஒன்றில் ரிலாக்ஸ் ஆக அடிக்கடி போய் வருகிறார் என்ற விஷயம் கசிந்துள்ளது. ஆனால் கிரண் எப்போதுமே உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற அதீத ஆசையில் கோவாவில் தனி வில்லா ஒன்றில் வாழ்ந்து வருகிறார்.

--Advertisement--

மேலும் அந்த வீட்டில் ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் உள்ளது. இத்தோடு தனக்கு என்று தனியாக ஒரு வெப்சைட்டை ஓப்பன் செய்து அதில் கிளாமரான அவரது புகைப்படங்களை வெளியிட்டு வருமானம் பார்த்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சென்னையில் ஒரு ரெஸ்டாரன்ட் மற்றும் அழகு சம்பந்தப்பட்ட பொருளுக்கு அம்பாசிடராக இருக்கிறார். இப்படி கைவசம் ஏகப்பட்ட தொழிலை செய்து வரும் கிரண், சினிமா கை கொடுக்காத நிலையில் இத்தனை தொழில்களையும் பார்த்து வருகிறார்.

இதனை அடுத்து கோடிகளில் புரளும் நடிகையாக மாறியிருக்கும் கிரண், சுமார் 40 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்திருக்கிறார் என்ற தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கோவாவில் இருக்கும் இவரை எப்படியாவது சந்தித்து விட முடியுமா? என்று துடியாய் துடிக்கிறார்கள்.

எனவே வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் கிரணை மீட் செய்ய கோவா செல்ல இளைஞர்கள் அனைவரும் படையெடுப்பார்கள் என்று கூறலாம்.