டைம் ட்ராவல் பண்ணி பின்னாடி போனா.. இதை மாத்துவேன்..! - கண்ணீர் விட்டு அழுத நயன்தாரா..!

டைம் ட்ராவல் பண்ணி பின்னாடி போனா.. இதை மாத்துவேன்..! – கண்ணீர் விட்டு அழுத நயன்தாரா..!

நயன்தாரா என்ற சொல்லை கேட்டாலே இளைஞர்கள் அனைவரும் சிலித்து எழுந்து நிற்பார்கள். அந்த அளவு தன்னுடைய நடிப்புத் திறனாய் தென்னிந்திய திரை உலகை மட்டுமல்லாமல் பாலிவுட் திரை உலகையும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் தான் நடிகை நயன்தாரா.

நயன்தாரா..

மலையாளத் திரையுலகில் அறிமுகமான இவர் தமிழ் படத்தில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து ஐயா திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் தல அஜித் முதல் அனைவரோடும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

பல்வேறு வகையான விருதுகளை பெற்றிருக்கும் நயன்தாரா அண்மையில் நடித்த அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. எனினும் ஓடிடி தளத்தில் வெளி வந்த இந்த படம் மதத்தை மையப்படுத்தி இருப்பதாக கூறி ஓடிடி தளத்திலிருந்து நீக்கியது சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே ரசிகர்களால் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படக்கூடிய நயன்தாரா அண்மை பேட்டி ஒன்றில் டிடி உடன் பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு பலர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

--Advertisement--

என்னதான் கோடிகளில் புரண்டாலும், விரலுக்கு ஏற்ற வீக்கம் இருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவருக்கும் சில உருக்கமான நிகழ்வுகள் நடந்து உள்ளது. இதில் குறிப்பாக இவரது தந்தைக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதை நினைத்து இவர் மிகவும் வருத்தத்தோடு பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி இடம் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

டைம் ட்ராவல்..

அந்த வகையில் இவர் டைம் டிராவல் என்ற ஒரு ஆப்ஷன் உண்மையில் இருந்தால் கண்டிப்பாக பின்னாடி சென்று தனது தந்தை எப்படி முன்பு ஆரோக்கியத்தோடு இருந்தாரோ அதை மீட்டு மீண்டும் மாற்றுவேன் என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.

உண்மையில் இந்த டைம் டிராவல் இருக்கக்கூடிய பட்சத்தில் பலருக்கும் பலரது எண்ணங்களை ஈடேற்றக் கூடிய வகையில் இது உதவி செய்யும் என்பதை குறிக்கும் வகையில் தான் இவரும் தனது தந்தை ஆரோக்கியத்திற்கு என்ன செய்ய முடியுமோ தன்னால் அதை செய்வதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தோடு இருந்த நாட்களை திரும்பி அசை போட வேண்டும் என நினைத்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் கண்ணீர் விட்டு அழுத நயந்தாராவிற்கு டிடி ஆறுதல் கூறியிருப்பதோடு விரைவில் எல்லாம் சரியாகும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

எனவே வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதர்களுக்கும் துன்பம் ஏற்படுவது சகஜமான ஒன்று தான். அந்த துன்பத்தையே தகர்த்து எறிந்து அதில் இருந்து மீண்டு வந்து நாம் வெற்றியடைவதுதான் மிகவும் முக்கியமான ஒன்று.

 

அந்த வகையில் மக்கள் மத்தியில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற நயன்தாராவும் எமோஷனலான விஷயத்தை கூறிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மருத்துவமனையில் ஐ சி யு வில் தன் தந்தை சிகிச்சை பெற்று வந்த நாட்களை நினைவு கூர்ந்து நயன்தாரா பேசியது அவருக்குள் இவ்வளவு அப்பா பாசம் உள்ளதா? என்பதை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் கண்டிப்பாக நினைத்தது ஈடேறும் திரை வாழ்க்கையில் எப்படி சிம்மாசனம் போட்டு அமர்ந்தீர்களோ அதுபோல நல்லதே நடக்கும் என கூறி இருக்கிறார்கள்.