“தப்பான உறவில் இருந்தேன்.. நல்லவன்னு நெனச்சேன்..” – ஆனால்.. – காதலன் பிரிவு குறித்து பிரியா பவானி ஷங்கர்.!

பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய காதலன் குறித்து சமீபத்திய வீடியோ ஒன்று பேட்டி ஒன்று பேசி இருக்கிறார்.

இவருடைய இந்த பேச்சின் மூலம் நிறைய விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. நடிகை பிரியா பவானி சங்கர் தற்பொழுது ராஜா வேலு என்பவரை காதலித்து வருகிறார்.

ஆனால், இதற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்திருக்கிறார் என்று தெரியவருகிறது. அதேபோல ராஜவேலுவும் வேறொரு பெண்ணை காதலித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.

என்ன விஷயம்.. முழுதாக பார்க்கலாம் வாங்க. முன்னதாக நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய முதல் காதலன் குறித்து பேசி இருக்கிறார்.

அவர் கூறியதாவது, ஒருமுறை நான் மோசமான ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.. நல்லவன் என்று நான் நினைத்த அவன் மிகவும் மோசமானவனாக இருந்தான்.. ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் அவதிப்பட்டேன்.. இவனை நம்பி காலம் முழுதும் நம்மால் இருக்க முடியாது என்பதால் அந்த காதலை அங்கேயே பிரேக் அப் செய்து கொண்டேன். அவனை விட்டு பிரிந்து வந்து விட்டேன் என கூறியிருந்தார்.

அதன் பிறகு, சில வருடங்கள் கழித்து ராஜவேலு என்பவரை காதலிக்க தொடங்கி இருக்கிறார் நடிகை பிரியா பவானிசங்கர் தற்போது வரை காதலித்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய காதலனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்று தெரிகிறது.

திருமணம் செய்து கொண்டால் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காது என்பதால் இந்த முடிவில் இருக்கிறார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய காதலனுடன் கட்டிப்பிடித்தபடி முத்தம் கொடுத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நாங்கள் எங்களுடைய புது வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டோம் என்று கேப்ஷன் வைத்திருந்தார்.

இதன் மூலம் இருவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள் என்பது தெரிகிறது. மட்டுமில்லாமல் தன்னுடைய காதலன் ராஜவேலுவுக்கு உணவகம் ஒன்றையும் அமைத்து கொடுத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர் என்று கூறுகிறார்கள்.

நடிகை பிரியா பவானி சங்கருக்கு ராஜவேலு இரண்டாவது காதலன் என்பது தெரிந்துவிட்டது. ஆனால், ராஜவேலுவுக்கு ரியா பவானி சங்கர் இரண்டாவது காதலி என்ற விஷயத்தையும் பிரியா பவானி சங்கரே வேறு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இது பற்றி அவர் கூறியதாவது, தன்னுடைய காதலனுடன் ஒருமுறை ஹாஸ்டலில் இருந்து அவுட்டிங் சென்றேன். என்னுடைய ஹாஸ்டலுக்கு காரில் எளிமையாக உள்ளே வந்து விட்டார் ராஜவேலு.

என்ன காரணம் என்றால்.. அதே ஹாஸ்டலில் வேறு ஒரு பெண்ணை ஏற்கனவே காதலித்து கொண்டிருந்தார் ராஜவேலு. அவளை பிரேக்கப் செய்த பிறகு தான் என்னை காதலிக்க தொடங்கினார்.

காரில் என்னை அழைத்துக் கொண்டு வெளியே செல்லும் பொழுது கேட்டில் இருந்த வாட்ச்மேன் என்னிடம் எங்கே செல்கிறீர்கள்..? யார் இது..? என்றெல்லாம் கேள்வி கேட்டார்.

நான் பயங்கரமாக பயந்து விட்டேன். ஆனால், அந்த பயத்தை உள்ளே வைத்துக் கொண்டு.. இது என்னோட பாய் ப்ரெண்ட்.. இவருடன் தான் நான் வெளியே செல்கிறேன். என்னுடைய வீட்டிற்கு போன் செய்து சொல்ல வேண்டுமா..? சொல்லுங்கள்.. என்று வாட்ச்மேனை மிரட்டினேன்.

உடனே அவர் சரி… சரி.. போங்க என்று விட்டுவிட்டார் என கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

   

--Advertisement--