ரம்யா கிருஷ்ணன் கணவர் முதலில் காதலித்த நடிகை இவர் தான்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ் திரை உலகில் எவர்கிரீன் நடிகையாக இன்று வரை இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நிலைத்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை.


இவரது கவர்ச்சி ஆட்டத்திற்கும் தெய்வீக நடிப்பிற்கும் பஞ்சமில்லை என்று சொல்லக்கூடிய அளவு வித விதமான கேரக்டர் ரோல்களை செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே மாறி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய பக்குவமான நடிகை.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

ரம்யா கிருஷ்ணன் தனது 14 வயதில் திரை உலகில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் இவர் 1985-இல் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்து வெளி வந்த வெள்ளை மனசு என்ற திரைப்படம் தான் முதல் திரைப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க: அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணட்டுமா.. வம்படியாக கேட்டு. வாய்ப்புகளை அள்ளும் அணுவான நடிகை.!

இதனை அடுத்து 1985-இல் ரஜினிகாந்த் உடன்படிக்காதவன்,1987- இல் கமலஹாசனடன் பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்து அசத்தினார்.

--Advertisement--


இதனல அடுத்து ஹீரோயினியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 1991-ல் கேப்டன் பிரபாகரன் 1995-ல் அம்மன், 1999-இல் படையப்பா, 2001-இல் நாகேஸ்வரி, 2002-இல் பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் பாகுபலி, படையப்பா போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ராஜமாதாவாக கலக்கிய இவருக்கு இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கணவர் முதல் காதலித்த நடிகை..

இதனை அடுத்து இவர் சினிமாவில் பீக்கில் இருந்த போதே தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சையை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் 2003 ஜூன் பன்னிரண்டாம் தேதி நடந்தது.


இயக்குனர் கிருஷ்ண வம்சி ரம்யா கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட பின் பானுப்பிரியாவை காதலித்ததாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்க கூடிய விஷயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் நடிகை பானுப்பிரியா முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சமயத்தில் ஆதர்ஷ் கௌசல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து பெற்று 2005 முதல் பிரிந்து வாழ்கிறார்கள்.


மேலும் பானுப்பிரியா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சி நடிகை பானுப்பிரியாவை துரத்தி துரத்தி காதலித்ததாகவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைத்ததாகவும் சொன்ன விஷயம் தான் ரசிகர்களை ஷாக்காக வைத்துள்ளது.

ரகசியம் உடைத்த பிரபலம்..

இந்த விஷயத்தை தற்போது திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பேசி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: சினிமாவில் சிக்கி சீரழியும் அம்மா, ஆண்ட்டி நடிகைகள்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய நடிகர்..!


இதனை அடுத்து இணையம் முழுவதுமே ரம்யா கிருஷ்ணனின் கணவரின் செயலை பற்றி பேசி வருவதோடு இப்படி நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? நம்பலாமா? நம்ப வேண்டாமா? என்பது என்ற ரீதியில் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்று சினிமாத்துறையில் நிச்சயமாக எவராலும் எளிதில் கணிக்க முடியாது என்ற வாசகங்களை தொடர்ந்து பேசி இந்த விஷயத்தை வைளாக மாற்றி விட்டார்கள்.