மற்ற நடிகைகள் வெளியே சொல்ல கூச்சப்படும் விஷயத்தை… ஓப்பனாக கூறிய சமந்தா..!!

நடிகை சமந்தா ( Samantha ) தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் வலம் வரும் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா தற்சமயம் ஒரு நேர்காணலில் நடிகைகள் மூடி மறைக்கும் விஷயங்களை தைரியமாக வெளியே சொன்னார்.

சமந்தா

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவரும் அளவிற்கு அவரது திறமை அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இவரது எதார்த்தமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார் இந்த நிலையில் நடிகை சமந்தா தற்சமயம் மயோட்டிஸ் எனும் நோயின் மூலம் பாதிக்கப்பட்டிருந்தார்.நீண்ட நாட்கள் இந்த நோயினால் அவதி பட்டுக் கொண்டிருந்த சமந்தா பிறகு தீவிர சிகிச்சைக்கு பின் அதிலிருந்து முற்றிலும் குணமடைந்தார்.

இதனை அடுத்து சமந்தா நீண்ட நாட்கள் திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வு அளித்து வந்தார்.

--Advertisement--

சமந்தா

இதனிடையே நடிகை சமந்தா தற்சமயம் ஒரு நேர்காணலில் நடிகைகளின் கஷ்டங்களையும் இன்ப துன்பங்களையும் பற்றி வெளிப்படையாக கூறியிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது முன்னணி நடிகைகள் என்றாலே நிறைய விஷயங்களை மறைக்க வேண்டியதாயிற்று தனக்கு ஏதாவது உடல் ரீதியாக குறைபாடுகள் மற்றும் ஏதாவது நோய் இருந்தால் வெளியே சொல்ல தயங்கும் அளவிற்கு நடிகைகளின் நிலைமை உள்ளது.

ஏனென்றால் இதை வெளியே சொன்னால் தங்களது மார்க்கெட் குறைந்து விடுமோ என்று பயந்து அவர்களைப் பற்றி யாரும் ஓப்பனாக வெளியே சொல்ல மாட்டார்கள்.

ஆனால் நான் அப்படி இருக்க மாட்டேன் என்னுடைய நிலைமையை பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பேன் இதனிடையே நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்து அதை மக்களிடம் வெளிப்படையாக கூறியிருந்தேன்.

நிறைய மக்கள் எனக்கு ஆதரவு கொடுத்து கவலைப்படாதே உமக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று நிறைய மக்கள் எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

சமந்தா

மேலும் நடிகை சமந்தா தற்சமயம் அந்த நோயின் மூலம் முழுவதுமாக குணமடைந்ததை அடுத்து திரைப்படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். முன்னதாக நடிகை சமந்தா யசோதா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் போதிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வி படமாக அமைந்தது. இதனை அடுத்து சகுந்தலம் எனும் திரைப்படத்தில் தற்சமயம் நடித்திருக்கிறார்.

இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இவரது ரசிகர்கள் மகிழ்ச்சிகரமாக உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தேவர் கொண்டவுடன் குஷி என்ற திரைப்படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார்.

இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாக உள்ளது.மேலும் சமந்தா நடிகைகள் தங்களுக்கான தேவைகளையும் தங்கள் படும் கஷ்டங்களையும் மக்களிடம் வெளிப்படையாக தெரிவித்தால் நல்லது என்று ஓப்பனாக கூறி உள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.