“நான் உன்ன இனப்பெருக்கம் பண்ணட்டுமா..?” – மோசமான கேள்விக்கு சமந்தா நெத்தியடி பதில்..!

சினிமா நடிகைகள் இணைய பக்கங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்து உரையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

அப்படி கலந்துரையாடும் பொழுது விவகாரமான கேள்விகளை எழுப்பி வாங்கி கட்டிக் கொள்ளும் ரசிகர்களும் இருக்கிறார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடிகைகளை சீண்டி.. கேட்க கூடாத கேள்விகளை கேட்டு கடுப்பாக்கும் இணையவாசிகள் கூட்டம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில் நடிகை சமந்தா சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்பொழுது மோசமான கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார் இணைய ஆசாமி ஒருவர்.

நடிகை சமந்தா, பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அளவுக்கு வளர்ந்தார் நடிகை சமந்தா.

--Advertisement--

தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது சக நடிகர் மற்றும் பிரபல தெலுங்கு நடிகரின் மகனுமான நாகசைதன்யாவை காதலித்து திருமணமே செய்து கொள்ளாமல் இரண்டு ஆண்டுகள் அவரிடம் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த விவகாரம் இணைய ஊடகங்களில் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியான பிறகு இருவரும் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டனர்.

எந்த அளவுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார்களோ.. அதே அளவு அவசர அவசரமாக விவாகரத்தும் செய்து விட்டனர். இப்படி குருகிய காலத்திலேயே சினிமா துறையில் அறிமுகமாகி உச்ச நட்சத்திரமாகி திருமணம் செய்து கொண்டு.. விவாகரத்து பெற்று.. என பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை சமந்தா.

இடையில் ரசிகர் ஒருவருடன் உரையாடிய பொழுது நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா..? இல்லை என்றால் சொல்லுங்கள்.. நான் உங்களை இனப்பெருக்கம் செய்கிறேன்.. என்று மோசமான கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.

இதனை பார்த்த சமந்தா முதலில் இனப்பெருக்கம் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்த வேண்டும்..? எங்கு பயன்படுத்த வேண்டும்..? என்று கூகுளில் தேடுங்கள் என நெத்தியடி பதில் கொடுத்து இருக்கிறார்.