1500 கோடி சொத்து.. நான்காம் தாரமா போயிட்டா.. நடிகையின் முன்னாள் கணவர் கூறிய தகவல்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மைசூரில் பிறந்து வளர்ந்த நடிகையான பவித்ரா லோகேஷ் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார்.

தன்னுடைய 16 வயதிலேயே திரையத்துறையில் அறிமுகமான இவர் அதன் பிறகு கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கன்னட நடிகை பவித்ரா லோகேஷ்:

நல்ல உயரம் மிக அழகான தோற்றம் என குடும்ப பங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் பவித்ரா லட்சுமி,

தமிழில் கௌரவம், அயோக்கியா, கூகுள் குட்டப்பா, வீட்ல விசேஷம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

--Advertisement--

இதனிடையே அவர் திரைப்பட வாய்ப்புகளையும் தாண்டி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சுசேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட 11 வருடம் இருவரும் சேர்ந்து வாழ்ந்து பின்னர் 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

60 வயது நடிகருடன் திருமணம்:

அதன் பிறகு தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் ஆன நரேஷ் பாபுவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

ஆம், ரூ. 1500 கோடி சொத்துக்காக ஆசைப்பட்டு 45 வயது மதிக்கத்தக்க நடிகையான பவித்ரா லட்சுமி தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான 60 வயது நரேஷ் பாபுவை மூன்றாம் தாரமாக திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த விவகாரம் டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தியாக மாறிவிட்டது . ஆம் தெலுங்கு சினிமாவில் பிரபலம் மூத்த நடிகராக இருந்து வருபவர் நடிகர் நரேஷ் பாபு.

இவருக்கு கிட்டத்தட்ட 60 வயதாகிறது. இந்த வயதில் 45 வயதான நடிகை பவித்ரா லோகேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரூ. 1500 கோடி சொத்துக்கு பக்க பிளான்:

ஏற்கனவே மூன்று திருமணம் செய்து கொண்ட நடிகர் நரேஷ் பாபு இரண்டு முறை விவாகரத்து செய்து கொண்ட பவித்ரா லோகேஷ் திருமணம் செய்து செய்து கொண்டது திரை வட்டாரத்தில்,

மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. இந்த வயதான காலத்தில் திருமணம் செய்துகொண்டு இருவரும் துபாய்க்கு ஹனிமூன் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகிய முகம் சுளிக்க வைத்தது.

தற்போது திருமணத்திற்கு பின்னரும் நடிகை பவித்ரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் நடிகை பவித்ராவின் முன்னாள் முதல் கணவர் சுசேந்திர பிரசாத்,

ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்றைக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது நடிகை பவித்ரா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர்.

முதல் கணவர் கூறிய அதிர்ச்சி தகவல்:

அதற்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்வார். எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார். அப்படித்தான் மிகப்பெரிய பிளானை போட்ட பவித்ரா,

60 வயதான நரேஷ் பாபுவின் ரூ. 1500 கோடி சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு வயது ஆனாலும் பரவாயில்லை என்று கூறி,

தனது 45 வயதில் அவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பணத்துக்காக என்னை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து சென்ற பவித்ரா,

நரேஷ் பாபுவுடன் உண்மையாக ஒருகாலம் வாழமாட்டார். இது கூடிய விரைவில் நரேஷ் பாபுவுக்கே தெரியவரும் என கூறி அதிரவைத்துள்ளார்.