20 வயதில் ஷோபனாவிற்கு ஷூட்டிங்கில் நடந்த டார்ச்சர்..! யார் இந்த பிரபல இயக்குனர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படம் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்க ரசிகர்களின் மத்தியில் இது ஒரு மாபெரும் வெற்றி படமாக விளங்கியது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷோபனா மற்றும் மம்முட்டிக்கு ஜோடியாகவும் பானுப்பிரியா நடித்திருந்தார்கள். படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் அமைத்திருந்தார்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு விஷயம் பரவலாக அனைவரும் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம்  படத்தில் ஹீரோயினியாக நடித்த ஷோபனா மணியின் டார்ச்சர் தாங்காமல் நிஜத்தில் அழுதுவிட்டாராம்.

ஏற்கனவே மலையாள படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்த இவர் இரண்டு மலையாள சூட்டிங் முடித்துவிட்டு தான் தளபதி படத்திற்கு வந்திருக்கிறார். பெரிய ஸ்டார்கள் மத்தியில் ஷோபனா நடித்துக் கொண்டிருந்த காரணத்தால் வீட்டுக்கு போய் இரண்டு மாதங்கள் மேலாகி விட்டதால் அவருக்கு வீட்டின் நினைப்பு வந்து ஏக்கம் ஏற்பட்டு விட்டது.

வெறும் 20 வயதை ஆன ஷோபனா தன் குடும்பத்தாரை விட்டு இருந்தது மிகப்பெரிய தாக்கத்தை அவருக்குள் ஏற்படுத்தியுள்ளது. எனினும் கொடுத்திருந்த கால்ஷூட்டை முடித்துவிட்டு விரைவாக வீட்டுக்கு செல்லலாம் என்று ஷோபனா திட்டம் போட்டு இருந்தார்.

ஆனால் படத்தின் ஷூட்டிங் கொடுத்த கால்ஷூட் முடிந்தும், படத்துக்கான ஷூட்டிங் முடிந்த பாடில்லை இன்று முடிந்துவிடும், நாளை முடிந்து விடும் என்று இழுத்துக் கொண்டே போனது.

அடுத்து ஷோபனா நாளை கண்டிப்பாக ஷூட்டிங் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் ரயில் டிக்கெட் எல்லாம் போட்டு விட்டார். ஆனாலும் அந்த காட்சியை படம் பிடிக்க முடியாமல் மறுநாள் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை அறிந்து கொண்டு துக்கம் தாங்காமல் சோபனா அழுததாகவும் இவர் அழுததற்கான காரணத்தை மம்முட்டி மணிரத்தினத்திடம் பகிர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

மணிரத்னம் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் ஊருக்கு தானே போக வேண்டும் என்று அசால்ட் ஆக கேட்க இவர் எதற்கு அழுதோம் என்று தோன்றக்கூடிய அளவு அந்த நிகழ்வு இருந்ததாம்.

ஆக இயக்குனர் மணிரத்தினம் தன்னை வீட்டிற்கு அனுப்பாமல் பல வகைகளில் ஷூட்டிங் சமயத்தில் டார்ச்சர் செய்தது போல் தொடர்ந்து பட ஷூட்டிங் எடுத்தது அவரது மனதில் இருந்துள்ளது.