“ஜோதிகாவின் மகுடிக்கு பம்பாயில் பாம்பாய் ஆடும் சூர்யா..!” – கோபத்தில் கொப்பளிக்கும் நடிகர் சிவகுமார்..!

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று தனது அப்பா நடிகர் சிவக்குமாரின் கட்டுப்பாட்டில் வளர்ந்த சூர்யா, கூட்டுக் குடும்ப பாரம்பரியத்தில் நேர்த்தியான முறையில் வளர்ந்ததோடு திரை துறையிலும் ஆரம்பத்தில் தடுமாற்றங்களை சந்தித்து இருந்தாலும், தற்போது தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருப்பவர்.

கலை குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி இன்று வரை ஒற்றுமையாக இருப்பது பலரையும் வியப்பில் தள்ளியுள்ளது. இவரது தம்பி கார்த்தியும் திரையுலகில் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தன் அண்ணனுக்கு நிகராக திரைத்துறையில் தற்போது சாதித்து வருகிறார்.

மிகவும் கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட நடிகர் சூர்யா சினிமாவில் வளர்ந்து வந்த நிலையில் ஜோதிகாவை காதலிப்பதை வீட்டில் கூறிய போது அதற்கு நடிகர் சிவகுமார் ஒப்புதல் தரவில்லை. எனினும் மகனின் ஆசையை நிராசை செய்ய வேண்டாம் என்று அவர்களது திருமணத்திற்கு ஓகே தெரிவித்தார்.

ஆரம்பத்தில் ஜோதிகாவும் குடும்பத்தார் பேச்சைக் கேட்டுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டார். எனினும் தற்போது மனைவியின் பேச்சைக் கேட்டு சூர்யா மும்பையில் வீடு வாங்கி குடியேறிவிட்டார். அங்கு தான் குழந்தைகளும் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சூர்யா பற்றி பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு காரணம் சூர்யா நடிப்பதோடு நின்று விடாமல் படத் தயாரிப்பு மற்றும் பல நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து வருவதாகவும் கருத்துக்கள் வெளி வந்தது.

--Advertisement--

இந்த சூழ்நிலையில் தனது மகனின் முதலீடுகள் விஷயத்தில் எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்காத நடிகர் சிவகுமார் சமீபத்தில் திடீரென்று சூர்யா செய்த செயலால் கடுப்பாகிவிட்டார். இதற்கு காரணம் ஐ எஸ் பி எல் என்ற கிரிக்கெட் விளையாட்டின் சென்னை அணியை சூர்யா விலைக்கி வாங்கி இருப்பது நடிகர் சிவகுமாருக்கு பிடிக்கவில்லை.

மேலும் இது வரை கட்டுப்பாடோடு வளர்த்த தனது மகன் சூதாட்டத்தில் இறங்கி விட்டார். இங்கு கிரிக்கெட்டும் சூதாட்டத்திற்கு சமம் தான் என்ற எண்ணத்தில் இருக்கும் சிவக்குமார் இதை நினைத்து வருந்தி வருகிறார்.

மேலும் சூர்யா இப்போது மனைவியின் மகுடி பேச்சுக்கு ஆடக்கூடியவராய் மாறிவிட்டார். எந்த விதத்திலும் குடும்பத்தாரோடு, எதையும் கலந்து கொள்வதில்லை. அத்தோடு மனைவியின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த கிரிக்கெட் அணியை விலைக்கி வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணத்தால் சிவக்குமார் வீட்டில் புகைச்சல் ஆரம்பித்து விட்டது.