குடி போதையில் கேரவேனுக்குள் முன்னணி நடிகருடன் திரிஷா தகராறு.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

குடி போதையில் கேரவேனுக்குள் முன்னணி நடிகருடன் திரிஷா தகராறு.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

நம்பர் நடிகைகளுக்கு தென்னிந்திய திரை உலகில் அதிக மவுஸ் உள்ளது என்று கூறலாம். அந்த வகையில் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை திரிஷா இவர்கள் இருவருமே முன்னணி கதாநாயகிகளாக திகழ்ந்தவர்கள்.

மேலும் நடிகை திரிஷா தற்போது நயன்தாராவுக்கு கடுமையான டப் கொடுத்து வருகின்ற சூழ்நிலையில் அவரைப் பற்றி சில அந்தரங்க விஷயங்களை புட்டு, புட்டு வைத்த பிரபலம் என்ன சொன்னார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

திரிஷா..

சென்னையில் பிறந்த நடிகை திரிஷா, எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். மாடலிங் துறையில் ஆரம்பத்தில் களம் இறக்கி கலக்கிய இவர் தமிழ் சினிமாவின் உச்சகட்ட நட்சத்திரமாக 24 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பயணத்தை சீரும் சிறப்புமாக செய்து வருகிறார்.

இவரது பயணத்தை பொறுத்த வரை 1999 ஆம் ஆண்டு பிரசாத் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளி வந்த ஜோடி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்தது மூலம் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 போன்ற திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி வாகை சூடியதை அடுத்து 2004 ஆம் ஆண்டு தளபதி விஜய் உடன் இணைந்து கில்லி படத்தில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

இதனைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்திருக்க கூடிய இவர் அண்மையில் வெளி வந்த லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றியை கொண்டாடினார்.

பொன்னியின் செல்வனின் குந்தவையாக வந்து ரீ என்ட்ரியில் கலக்கிய இவர் தற்போது கமலஹாசன், அஜித்தோடு இணைந்து படங்களில் நடித்து வருகிறார்.

குடி போதையில்…

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாபு திரிஷாவை பற்றி சில விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார். இந்த விஷயத்தில் குறிப்பாக திரிஷாவிற்கு குடிப்பழக்கம் இருந்தது என்பதை அவர் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

சினிமாவின் ஆரம்ப கட்டத்தை அடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்த சமயத்தில் இவருக்கும் மிகப்பெரிய நடிகரோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்த சமயத்தில் படபிடிப்பின் இடைவேளை சமயத்தில் அந்த ஹீரோவும் இவரும் ஒன்றாக இணைந்து மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் மது போதை அதிகரித்த நிலையில் கேரவனில் இருந்த அந்த டாப் நடிகரோடு வாய் தகராறு செய்திருக்க கூடிய திரிஷா பற்றி அன்றே பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு பிரபலமாக்கியது.

இந்த நிகழ்வுக்கு இன்று வரை நடிகை திரிஷா மறுப்பு எதும் தெரிவிக்கவில்லை என்பதை நீங்கள் குறிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

அத்தோடு குடிபோதையில் கேரவனுக்குள் முன்னணி நடிகரோடு திரிஷா தகராறு செய்து விட்டாரா? என்ற பேச்சு அவர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு யார் அந்த நடிகர் என்ற கேள்வியில் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

எனவே விரைவில் ரசிகர்கள் யார் அந்த நடிகர் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள் என்று கூறலாம். மேலும் சில ரசிகர்கள் நடிகையர் திலகம் முதல் இன்று இருக்கும் முன்னணி நடிகைகள் அனைவருக்கும் இந்த பழக்கம் உள்ளதால் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது போல் விடை அளித்து இருக்கிறார்கள்.

   

--Advertisement--