திரிஷா திருமணம் நின்று போனது ஏன்..? – ரகசியம் உடைத்த திரிஷா-வின் அம்மா..!

நடிகை திரிஷா தயாரிப்பாளர் வருண்மணியன் ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததும் அதன் பிறகு திருமணம் நின்று போனதும் பலரும் அறிந்த விஷயம்.

ஆனால், இது குறித்து இரு தரப்பிலிருந்தும் அறிவிப்பு மட்டுமே வெளியானது. தவிர என்ன காரணம் என்று இதுவரை யாரும் கூறியது கிடையாது. அவ்வப்போது வதந்தியாக கிசுகிசுவாக சில தகவல்கள் வெளியாவது வழக்கம்.

ஆனால் முதன்முறையாக திரிசா அவர்களின் அம்மா எதனால் த்ரிஷாவின் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையிலும் நின்று போனது என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் என்றும் அவர் என்ன பேசினார் என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, நடிகை திரிஷாவுக்கு பணக்கார மாப்பிள்ளை தான் மருமகன கணவராக வேண்டும் என்று திரிஷாவின் தாய் தேடிக்கொண்டிருக்கிறார். அதற்கேற்றார் போல சினிமா தயாரிப்பாளர் வருண்மணியன் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியிருக்கிறார்.

நிச்சயதார்த்தம் செய்யும் முன்பே திருமணத்திற்கு பிறகும் திரிஷா தொடர்ந்து நடிப்பார் என்றும் திரிஷாவுடன் அவருடைய அம்மாவும் இருப்பார் என்ற இரண்டு கண்டிஷன்களை கூறியுள்ளது திரிஷா தரப்பு.

அதற்கு வருண்மணியன் தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்த பிறகு தான் திரிஷா-வருண் மணியன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு நடிகர் திரிஷா சினிமாவில் நடிக்க கூடாது என்றும் அவருடைய அம்மா திரிஷாவுடன் இருந்தால் சரிப்பட்டு வராது என்றும் அவர்கள் கட்டுப்பாடு விதித்ததாகவும் கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று ஒரே காரணத்திற்காக எங்களுக்கு பிடிக்காத ஒரு உறவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

நாலு பேர் நான்கு விதமாக பேசுவார்கள் என்பதற்காக எங்களுக்கு ஒத்து வராத ஒரு உறவுடன் சேர்ந்து வாழ்வது என்பது முடியாத காரியம். இதனால் தான் நிச்சயதார்த்தமானாலும் சரி என்று திருமணத்தை நிறுத்தி விட்டோம் என பகிர்ந்து கொண்டார் நடிகர் திரிஷாவின் தாய் என பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

   

--Advertisement--