உடலுறவை இளம் பெண்கள் இதனால் தான் என்ஜாய் செய்வது இல்லை.. நடிகை வித்யா பாலன் ஓப்பன் டாக்..!

சமூகவியல் பாடத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்கும் நடிகை வித்யா பாலன் ஆரம்ப நாட்களில் பாலிவுட் படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்திருக்கும் ஒரு அற்புதமான நடிகை என்பது உங்களுக்குத் தெரியும்.


இவர் திரைக்கு வந்த புதிதில் பாலோ தேகோ என்ற வங்கப்படத்தில் நடித்து ஹிந்தி திரைப்படமான பரிநீத்தா என்ற படத்தில் 2005 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவரது நடிப்பை மெச்சி ஃபிலிம் பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.

நடிகை வித்யா பாலன்..

பாலக்காட்டில் பிறந்து வளர்ந்த இவர் பள்ளிப்படிப்பை அங்கு இருக்கும் புனித அந்தோணி பள்ளியில் படித்த பிறகு மலையாள திரைப்படமான சக்கரம் என்ற படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆன நிலையில் அந்த படம் தள்ளி வைக்கப்பட்டது.

இதனை அடுத்து தமிழ் திரைப்படமான ரன் திரைப்படத்தில் நடிக்க கையொப்பமிட்டார். எனினும் எதிர்பாராத சில சூழ்நிலையின் காரணமாக இந்த படப்பிடிப்பில் பங்கு கொள்ள முடியாமல் அந்த படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார்.


பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆன நிலையில் பட வாய்ப்புகள் கை நழுவி போனதை அடுத்து தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த வித்யா பாலன் தொலைக்காட்சி தொடர்களிலும் ஆரம்ப நாட்களில் நடித்திருக்கிறார்.

--Advertisement--

இதனை அடுத்து மணிரத்தினத்தின் மூலம் மிகச் சிறந்த வரவேற்பை பெற்ற குரு திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த திரைப்படம் தான் வித்யா பாலனுக்கு முதல் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் இவர் தண்டுவட மரப்பு நோயால் அவதிப்படும் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

உடல் உறவு பற்றிய ஓபன் டாக்..

பல்வேறு ஃபிலிம் பேர் விருதுகளைப் பெற்றிருக்கக் கூடிய இவர் ஜீ சினி விருதுகள், சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள், ஸ்டார் லஸ்ட் விருதுகள் போன்றவற்றை பெற்றிருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் படு பிசியாக இருக்கக்கூடிய வித்யா பாலன் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருப்பார். அது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான பேட்டிகளை தந்து ரசிகர்களை மெர்சலாக்கி விடுவார்.


அந்த வகையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது உடல் உறவு குறித்து சில விஷயங்களை பதிவு செய்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாய் அடைத்து விட்டார்கள்.

இளம் பெண்கள் என்ஜாய் செய்வது இல்லையா?..

அப்படி என்ன விஷயத்தை அவர் பகிர்ந்து இருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் கூறிய விஷயங்கள் உண்மையாக இருக்குமோ? என்று அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

இந்த விஷயம் உடலுறவு என்றாலே ஒரு அருவருக்கத்தக்க பேசக்கூடாத ஒரு விஷயமாகவே சமூகத்தில் தற்போதும் பார்க்கிறார்கள். அது பெரும்பாலான மக்களை குறிப்பாக இளம் பெண்களை உடலுறவு விஷயத்தில் வெகுவாக பாதிக்கிறது.

மேலும் பல பெண்கள் உடலுறவு ஒரு தீண்டத்தகாத, விரும்பத்தகாத ஒரு விஷயமாகவே பார்க்கிறார்கள். இதனால் அவர்கள் உடலுறவை என்ஜாய் செய்வது கிடையாது. கடமைக்காக கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்க செய்கிறார்கள்.


ஆனால், அதுவே 40 வயது வரும் போது அவர்களுக்கு அதன் மீது இருந்த பயம், அருவறுப்பு தன்மை எல்லாம் குறைந்து காணாமல் போய்விடுகிறது. அத்துடன் 40 வயதை தாண்டிய பெண்கள் தான் உடலுறவு என்ஜாய் செய்கிறார்கள் என ஓப்பனாக பேசி இருக்கிறார் நடிகை வித்யா பாலன்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் அதிக அளவு பேசப்படும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இது பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் இது உண்மையாக இருக்குமோ? என்ற ரீதியில் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.