“வந்துட்டேன்னு சொல்லு .. மீண்டும் வந்துட்டேன்னு சொல்லு..!” – விஷால் படம் பற்றி இயக்குநர் ஹரி ஓபன் டாக்..!

விஷால் 34 ( Vishal 34 )தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நடிகர்களின் வரிசைகள் விஷால் ( Vishal ) இருந்தார். பெரும்பாலான படங்கள் நல்ல முறையில் வெற்றியை தந்ததோடு ரசிகர்களின் மத்தியில் பேசக்கூடிய படங்களாக அமைந்தது.

விஷாலின் பட வரவு சமீப நாட்களாக அதிக அளவு இல்லாத காரணத்தாலும் இவர் சினிமா துறையை விட்டு வெளியேறி விட்டாரா என்று கேட்கக் கூடிய வகையில் இருந்தது.

Vishal 34

அது மட்டுமல்லாமல் இவர் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தமிழ் திரையுலகம் கூறிவந்த நிலையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படமும் பேசும்படி இவருக்கு அமையவில்லை.

இவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் யாரையும் எதற்கும் சட்டை செய்யாமல் இருப்பதாகவும் சுருக்கமாக சொன்னால் பழைய சிம்பு எப்படி இருந்தாரோ அதுபோல இவர் மாறிவிட்டதாக திரையுலக வட்டாரங்கள் புகார்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது இவர் மீண்டும் திரையுலகத்தில் புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டு அதற்கு ஏற்ற வியூகங்களை வகுத்து வருகிறார் என்று தெரியவந்துள்ளது.

அந்த வகையில் தற்போது விஷால் நடிப்பில் 34 ஆவது படத்தை உருவாக்க இயக்குனர் ஹரி ஈடுபட போகிறார் இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.

--Advertisement--

Vishal 34

மேலும் இந்தத் திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் அவர்களின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப் படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஆரம்பிப்பார்கள் என தெரியவந்துள்ளது.

படத்தைப் பற்றி இயக்குனர் ஹரி தனது பேட்டியில் கூறி இருக்கக்கூடிய விஷயம் என்னவெனில் விஷாலுடன் மூன்றாவது முறையாக இவர் இணைந்து பணியாற்ற போவதாகவும் எனவே பொறுப்புகளும் கடமைகளும் நிறைய உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

Vishal 34

படத்தை பொறுத்தவரை போலீசாக விஷால் நடிக்கவில்லை என்றும் அதிரடி சண்டைக்காட்சிகள் அது இருக்கும் இந்த படத்தில் எமோஷனான காட்சிகளும் இருக்கும்இந்த படத்தின் கதை விஷாலுக்கு பொருத்தமாக இருக்கக்கூடிய வகையில் உள்ளது என்றும் கூறி இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பானது திருப்பதி ரேணிகுண்டா காரைக்குடி வேலூர் போன்ற இடங்களில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார் எனவே விரைவில் எந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் விஷாலின் ரசிகர்கள் இந்தப் படத்தில் ஆவது அவருக்கு ஒரு சிறந்த கம் பேக் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.