தமிழ் சினிமாவில் #METOO டேக்கில் புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பின்னணி பாடகி சின்மயி சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.
பெண்கள் தன்னிடம் கூறும் பாலியல் புகார்களையும் அவ்வப்போது ட்விட்டரில் வெளியிட்டு வந்தார். அதேபோல் இவரை இதுவரை 1.02 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், அவரிடம் மிகவும் தரக்குறைவாக "வந்து என்னுடைய வி****-வை குடி..! - நான் உன்னை சுவைக்கவேண்டும்" என்று மோசமாக ஒருவர் பேசியுள்ளார். அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அப்படியே வெளியிட்டுள்ளார் பாடகி சின்மயி.
மேலும் அந்த நபரின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ஆண்களே எனக்கு பதிலளியுங்கள். ஏன் சில ஆண்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஒரு வேளை நீங்கள் அதை கூறினால் எப்படி பெண்களை புரிந்து கொள்ளவேண்டும் என நான் விளக்குவேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
அதேவேளையில் சின்மயியிடம் ஆபாசமாக கேள்வி எழுப்பிய அந்த நெட்டிசன் தன்னை அம்பலப்படுத்தியதால் சமூகவலைதளத்தை விட்டே வெளியேறியுள்ளதாகவும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.
It has been a minute since I shared stuff like this.— Chinmayi Sripaada (@Chinmayi) June 9, 2019
Dear Men - please make me understand. Why do some men do this? It will help me understand and explain to others girls better. BTW this is called gender-based violence.
Any psychological studies on men like this in India?👇🏼 pic.twitter.com/4CDN9ySLGW


