அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பிகில்'. இப்படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் வெளியானது.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டாலும் இன்னும் விஜய்யின் அறிமுகக் காட்சியைப் படமாக்கவில்லையாம். அதற்காக மதுரையில் ஒரு முக்கிய கல்லூரியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று அட்லீ விருப்பப்பட்டுள்ளாராம்.
அந்தக் காட்சியைப் படமாக்க சுமார் இரண்டாயிரம் துணை நடிகர்கள் வரை கலந்து கொள்ள வேண்டுமாம். இதனை அறிந்த தயாரிப்பு நிறுவனம், அவ்வளவு துணை நடிகர்களை வைத்துக் கொண்டு மதுரையில் படப்பிடிப்பு நடத்துவதை விட சென்னையிலேயே நடத்தலாமே..! செலவு மிச்சமாகும் என கூறியதை இயக்குனர் அட்லீ ஏற்கவில்லையாம்.
இயக்குனர் அட்லீயிடம் சொன்னால் வேலைக்கு ஆகாது என்று விஜய்யிடம் கேட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம் ஆனால், விஜய்யும் அட்லி பக்கமே நிற்பதால் விரைவில் மதுரையில் அந்த அறிமுகக் காட்சியைப் படமாக்க உள்ளார்கள்.