நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த, விழாவிற்கு முன்பாகவே விழா நடக்கும் சாய் ராம் கல்லூரிக்கு வெளியே பயங்கரமான கூட்டம் கூடியது.
இதனால் பெரிய அளவில் அங்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இதனால் விழாவிற்கு விஜயின் அப்பா சந்திரசேகர் வருவதற்கே நீண்ட நேரம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவை பார்க்க வந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களும் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். போலியான டிக்கெட்டுகளை கொடுத்து அரங்கினுள் பலர் சென்று விட்டனர் என்றும், இனிமேல் அரங்கில் இடம் இல்லை என்று ஒரிஜினல் டிக்கெட் வைத்திருந்த பலரும் உள்ளே அனுமதிக்கபடவில்லை.
ஆனாலும், நாங்கள் விஜய்க்காக தான் வந்துள்ளோம். விஜய்க்காக தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். இல்லையென்றால் நடப்பதே வேறு. மேலும், சாய் ராம் கல்லூரி மாணவர்கள் கூட உள்ளே அனுமதிக்கபடவில்லை.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரும் போலீசாரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆடியோ வெளியீடு நடத்தினால் ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசிக்கும் படி செய்யுங்கள். இல்லையென்றால், யாரும் பார்க்க முடியாதபடி நேரடியாக தொலைகாட்சியில் வெளியிட்டு விடுங்கள்.
இது போன்ற அடிதடி செய்ய வேண்டாம். விஜய்யை பார்க்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் இன்று அடி வாங்கியது மட்டுமில்லாமல் ஏமாந்து போயுள்ளனர். என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.