கடந்த மூன்று மாதங்களாக உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் குறித்து கடந்த வருடமே வெளியாகியுள்ள "மூடர்" குறும்படம் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் தாமோதரன் செல்வகுமார் இயக்கியுள்ள இந்த குரும்படத்தில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் பின் இருக்கும் நாச வேலைகள் குறித்து எளிமையாக சித்தரித்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
சிலர் தங்களுடைய சுய லாபத்திற்காக புது புது நோய்களை உருவாக்கி அதற்கு மருந்து கொடுப்பதன் மூலம் கோடி கோடியாக பணம் சம்பத்திக்க முயற்சி செய்வதை படம் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர்.
இந்த குறும்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து இதனை முழு படமாக எடுக்க படக்குழு முடிவு செய்து அதற்க்கான வேளைகளில் இறங்கியுள்ளனர்.



