நான் வீணா போனதுக்கு காரணம் இது தான்.. 1st Time மௌனம் கலைத்த வடிவேலு!


தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக விளங்கிய வடிவேலு, திடீரென ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து விலகி, கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் புலப்படாமல் போனார். 

இதற்கு முக்கிய காரணமாக, அவர் 2011 தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அவரை அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சையானது. 

வடிவேலு ஆதரித்த கட்சி ஆட்சிக்கு வராததால், அவருக்கு எதிரான அரசியல் சூழலும், தயாரிப்பாளர்களின் பயமும் அவரது மார்க்கெட்டை சரித்ததாக பரவலாக பேசப்பட்டது. 

ஆனால், முதன்முறையாக இது குறித்து மனம் திறந்த வடிவேலு, இந்த கருத்தை மறுத்து, வேறு கோணத்தில் பதிலளித்துள்ளார். வடிவேலு கூறுகையில், “எனது மார்க்கெட் சரிவுக்கு அரசியல் காரணமல்ல. சினிமாவில் ஒவ்வொருவருக்கும் ஒரு நேரம் உண்டு. 

ஒருவர் உச்சத்திற்கு செல்வார், மற்றவர் திடீரென கீழே வருவார். இதை யாராலும் கணிக்க முடியாது.” தான் ஒதுங்கியிருந்த காலத்தை குடும்பத்திற்காக பயன்படுத்தியதாகவும், குழந்தைகளின் திருமணம், வீட்டு விவகாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

நான் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன் சில வருடங்கள் சினிமாவே தமிழ்நாட்டை விட்டு ஒதுங்கி இருந்தது சில வருடங்கள் இந்தியாவே கொரோனா காரணத்தினால் தனிமைப்பட்டு இருந்தது சில வருடங்கள் ஒட்டுமொத்த உலகமே எந்த வேலையும் செய்யாமல் இருந்தது அதுபோலத்தான் நான் சில வருடங்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்தேன் என கூறினார் வடிவேலு.

இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள வடிவேலு, தனது எதிர்கால திட்டங்களையும் வெளிப்படுத்தினார். 

“தனியாக காமெடி டிராக் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன். ஹீரோவுடன் பயணிக்கும் கதாபாத்திரமாகவோ அல்லது நானே ஹீரோவாகவோ நடிக்கும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவேன்,” என்று உறுதியாக கூறினார். 

இந்த மறுதோற்றத்தில், வடிவேலு தனது தனித்துவமான நகைச்சுவை பாணியுடன் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளார். அவரது இந்த முடிவு, சினிமாவில் தரமான பங்களிப்பை அளிக்கும் நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--