1962 ஆம் ஆண்டு. கிளிநொச்சியிலிருந்து சிறிது தொலைவில் அமைந்திருந்த உருத்திரபுரம் என்ற சிறிய கிராமம். அங்கு பிள்ளையார் கோயிலின் அமைதியான சூழலில், குருக்களாகப் பணியாற்றி வந்தவர் காசிலிங்க சர்மா. தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதிக்கு குடிபெயர்ந்த இவர், காரைநகரைச் சேர்ந்த பாரம்பரிய பூசகர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவரது மனைவி கோகிலாம்பாள் – இளம் வயதில் இந்தியாவிலிருந்து வந்த அழகிய பிராமணப் பெண். அழகென்றால் அழகு அவ்வளவு அழகு, சினிமா நடிகைகளை தோற்று போகும் பேரழகு, வாட்ட சாட்டமான தோற்றம். இருவருக்கும் வயது வித்தியாசம் இருபது ஆண்டுகள். ஆரம்பத்தில் இது பிரச்சினையாகத் தெரியவில்லை.பதினைந்து ஆண்டு திருமண வாழ்க்கையில் நான்கு குழந்தைகள் – இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்.

கோகிலாம்பாள் ஒரு இலட்சணமான தமிழ் இல்லத்தரசி. கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அனைத்துக் கடமைகளையும் தவறாமல் செய்து வந்தாள். ஆனால் காலம் செல்லச் செல்ல, காசிலிங்க சர்மாவின் வயது முதிர்ச்சி அதிகரித்தது. அவரால் மனைவியின் இளமையை திருப்திப்படுத்த முடியவில்லை.
இதனால் ஏற்பட்ட பாலியல் தகராறு, இருவருக்கும் இடையே விரிசலை உருவாக்கியது.காசிலிங்க சர்மா மதுவில் ஆறுதல் தேடினார். கவலையில் ஆழ்ந்தார். அப்போதுதான் அவர்களது தோட்டத்தில் வேலைக்கு வந்தான் வேலுப்பிள்ளை. கட்டுமஸ்தான உடல், இளமை தளும்பிய கறுப்பு நிற இளைஞன். மேலாடை அணியாமல் வேலை செய்வான்.
உழைப்பின் வியர்வையில் அவன் உடல் பளிச்சென்று தெரியும். கோகிலாம்பாளின் பார்வை அவன்மீது திரும்பியது. ஆரம்பத்தில் சிறிய உதவிகள் – சிறப்பான உணவு, இனிப்புகள், தேநீர். வேலுப்பிள்ளையும் அதை உணர்ந்தான். புன்னகை, நெருக்கம், பின்னர் ரகசிய சந்திப்புகள். கணவன் கோயிலில் பூஜை செய்யும் நேரத்தில், வீட்டு அறையில் கோகிலாம்பாளின் இளைமைக்கு வேலுப்பிள்ளை வைப்பதும். வேலுப்பிள்ளையின் வேட்கைக்கு பணிந்து கோகிலா பணிவிடை செய்தவது வழக்கமானது.
இது கோகிலாம்பாளின் மகள் இராஜலட்சுமிக்குத் தெரியவந்தது. தாய் கண்டிப்பாக எச்சரித்தாள்: "யாரிடமும் சொல்லக் கூடாது!" பயந்த மகள் மௌனமாக இருந்தாள்.கிராமம் சிறிது என்பதால், விரைவில் காசிலிங்க சர்மாவுக்கும் தெரிந்தது. அவர் வேலுப்பிள்ளையை வேலையிலிருந்து நீக்கினார். கோகிலாம்பாள் கடுமையாக எதிர்த்தாள். ஆனால் இறுதியில் வேலுப்பிள்ளை போய்விட்டான்.
அன்றிலிருந்து வீட்டில் அடுப்பு பற்றவில்லை. கோகிலாம்பாள் உணவு சமைக்க மறுத்தாள். குழந்தைகள் பசியால் அழுதனர். மூன்று நாட்கள் கழித்து, காசிலிங்க சர்மாவுக்கு வேறு வழியில்லை. வேலுப்பிள்ளையை மீண்டும் வேலைக்கு அழைத்தார். இப்போது இருவரும் தைரியமடைந்தனர். மாட்டு வண்டியில் தோட்டத்தில் சுற்றுதல், கிணற்றடியில் ரகசிய உரையாடல்கள், ஆள் இல்லாத புதர் பகுதியில் இளமை விளையாட்டுகள். இது காசிலிங்க சர்மாவின் தந்தைக்கும் தெரியவந்தது.
வேலுப்பிள்ளை சந்தேகத்தைத் தவிர்க்க பொன்னம்மா என்ற பெண்ணை மணந்து கொண்டு வந்தான். ஆனால், பொன்னம்மா விரைவில் உண்மையை அறிந்து, இது பற்றி வேலுப்பிள்ளையிடம் கேட்டு அடி உதை வாங்கி ஊருக்குத் திரும்பினாள். பொன்னம்மா சின்ன பொண்ணு என்றாலும் கோகிலாம்பாளின் ஒத்துழைப்பு நாள் முழுதும் வேலுப்பிள்ளையின் நினைவில் இருக்கும். இதனால், இருவருக்காம உறவு இன்னும் தீவிரமானது.
வேலுப்பிள்ளை கோகிலாம்பாளிடம், "உன்னை மணந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான். அவள் மறுத்தாள்: "கணவன் இருக்கும் வரை பாதுகாப்பு. இல்லையேல் ஊரார் பழி சுமத்துவார்கள்.""அப்படியானால்... அவரை அகற்றிவிடலாமே?" வேலுப்பிள்ளையின் வார்த்தைகள் விஷமாக ஒலித்தன. கோகிலாம்பாள் ஆரம்பத்தில் தயங்கினாள். பின்னர் உடன்பட்டாள்.
அதே நேரம் காரைநகரிலிருந்து கடிதம் வந்தது – காசிலிங்க சர்மாவின் தந்தையிடமிருந்து. மகன், மருமகள், பேரக்குழந்தைகளை வரச் சொல்லி. கோகிலாம்பாளுக்கு பயம். அங்கு போனால் திரும்புவது கடினம்.
வேலுப்பிள்ளையுடன் ஆலோசனைப்படி கொலைக்கான தேதியை நிர்ணயம் செய்தனர். 1962 டிசம்பர் 14 இரவு.அன்று இரவு. காசிலிங்க சர்மா மது குடித்து உறங்கினார். வேலுப்பிள்ளை முன்னரே மது கொடுத்திருந்தான். கதவை தட்டினான். பூனை போல சத்தமே போடாமல் கதவை திறந்தாள் கோகிலாம்பாள் திறந்தாள். வேலுப்பிள்ளை கையில் கொடூரமான கூர் தீட்டப்பட்ட அரிவாள். இரவு நேரத்திலும் அரிவாளின் முனைகள் மின்னியது.
மது போதையில்காசிலிங்க சர்மாமயங்கி கிடக்கிறார். கையில் அரிவாளுடன் வேலுப்பிள்ளை, இரவு நேரம், அவன் முன்பு கள்ளக்காதலி கோகிலா. இறுக்கி அணைத்தான்.. இதெல்லாம் அப்புறம்.. மொதல்ல வந்த வேலையை செய்.. என்று ஹஸ்கி குரலில் நடுக்கத்துடன் கூறினால் கோகிலா.
ஒரே வெட்டு – கழுத்தில். "ஆ..!" என்ற ஓசை மட்டும். இரத்தம் பீறிட்டது. அறை முழுதும் ரத்தம்.. உடலை சாக்கில் கட்டி, இரத்தம் தோய்ந்த உடைகளுடன் தோட்டத்தில் புதைத்தனர். உதவிக்கு வந்தவன் பசுபதி.மறுநாள் எல்லாம் சகஜம்.
குழந்தைகளிடம், "அப்பா காரைநகருக்கு போய்விட்டார்" என்றாள் கோகிலாம்பாள். போலி கடிதம் எழுதி மாமனாருக்கு அனுப்பினாள்.ஆனால் காசிலிங்க சர்மாவின் தந்தை சந்தேகப்பட்டார். போலிசுக்கு தகவல். வேலுப்பிள்ளை கைது. விசாரணையில் உடைந்து, அரிவாள் புதைத்த இடத்தைக் காட்டினான். ஆனால்,காசிலிங்க சர்மாசடலம் எங்கே என தெரியவில்லை.
தந்தை கோயிலில் பிரார்த்தனை செய்தார். கனவில் தோட்டத்தில்காசிலிங்க சர்மாசடலம் இங்கு தான் இருக்கிறது என்றுஒரு இடம் தெரிந்தது. தோண்டினர் – உடல் கிடைத்தது.
கோகிலாம்பாளும் கைது. ஒப்புதல் வாக்குமூலம். பசுபதி உதவியாள்.விசாரணை நடந்தது. வேலுப்பிள்ளைக்கும் கோகிலாம்பாளுக்கும் மரண தண்டனை. பசுபதி விடுதலை.அந்தக் காலத்தில் ஈழத்தில் பெரும் பரபரப்பு.
ஒரு கோயில் குருக்களை அவரது மனைவியே கொலை செய்தது – கேள்விப்படாத அதிர்ச்சி. நாளிதழ்கள் தினசரி செய்தி. மக்களின் அன்றாட பேச்சு.இன்றும் அந்தக் கதை நினைவில் நிழலாடுகிறது – காதல், துரோகம், கொலை என்ற இருண்ட மனித மனங்களின் சித்திரம்.
Summary in English : In 1962, in Uruthirapuram, Sri Lanka, temple priest Kasilinga Sarma was murdered by his wife Gokilambal and her lover Veluppillai due to an extramarital affair and age-related marital discord. The couple plotted the killing, buried the body in their garden, and attempted a cover-up. Police investigation led to their arrests and death sentences.

